ADVERTISEMENT

புதிதாக ஐந்து மாகாணங்களில் அவசரநிலையை அமல்படுத்திய ஜப்பான்!

07:11 PM Jul 31, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜப்பான் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் அதேநேரத்தில், அங்கு கரோனா தொற்றும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடமான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அவரசர நிலை அமல்படுத்தபட்டுள்ளது. இருப்பினும் அங்கு கரோனா பரவல் அதிகமாகவே உள்ளது.

அதேபோல் டோக்கியோவை தவிர மேலும் சில இடங்களிலும் கரோனா அதிகரித்து வந்ததது. இதனையடுத்து ஜப்பான் அரசு, டோக்கியோவில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசர நிலையை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டித்துள்ளதோடு, சைடாமா, சிபா, கனகாவா, ஒசாகா மற்றும் ஒகினாவா மாகாணங்களிலும் நாளை முதல் அவசர நிலை அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

இதைத்தவிர ஹொக்கைடோ, இஷிகாவா, கியோட்டோ, ஹியோகோ மற்றும் ஃபுகுவோகா மாகாணங்களில் ஹொக்கைடோ, இஷிகாவா, கியோட்டோ, ஹியோகோ மற்றும் ஃபுகுவோகா மாகாணங்களில் குறைவான அவசரகால கட்டுப்பாடுகள் நாளை முதல் ஆகஸ்ட் இறுதி வரை அமல்படுத்தப்படும்எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் ஜப்பான் அரசு, தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதோடு, இளம் வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT