Skip to main content

ஜப்பான் எடுத்த முடிவு! - ஆதரிக்கும் அமெரிக்கா; எதிர்க்கும் சீனா!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

japan

 

ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு, பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அந்தநாட்டை சுனாமி தாக்கியது. இதில், அந்தநாட்டின் புகுஷிமா அணு உலை கடும் சேதமடைந்தது. அப்போது, அணு உலையில், இருந்து வெப்பம் வெளியேறாமல் தடுக்கவும், கதிர்வீச்சைக் குறைக்கவும் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது.

 

அவ்வாறு, பயன்படுத்தப்பட்ட 1.3 மில்லியன் டன் தண்ணீர், அந்த அணுஉலை வளாகத்திலேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தண்ணீரை சுத்திகரித்து பசிபிக் கடலில் திறந்துவிட ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் சுத்திகரித்தாலும் தண்ணீரில் உள்ள ட்ரிடியத்தின் அளவை குறைக்கலாமே தவிர, முழுவதுமாகப் பிரித்தெடுக்க முடியாது. இருப்பினும் ட்ரிடியம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறப்படுகிறது. அதேநேரம் உலகில் உள்ள பல்வேறு அணு உலைகள், ட்ரிடியம் கலந்த தண்ணீரை கடலுக்குள் செலுத்தி வருகின்றன. இதனையொட்டியே ஜப்பானும் ட்ரிடியத்தின் அளவை குறைத்து தண்ணீரை பசிபிக் கடலில் விட முடிவு செய்துள்ளது. புகுஷிமா அணு உலையை முழுவதுமாக செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஒரு பகுதியாக தண்ணீரை வெளியேற்ற ஜப்பான் இந்த முடிவை எடுத்துள்ளது.

 

இதற்கு ஜப்பான் மீனவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தங்கள் தொழிலில் பெருங்கேடான தாக்கங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் சீனா, தென்கொரியா போன்ற நாடுகள், ஜப்பானின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சர்வதேச ஆணையங்கள் மற்றும் நிபுணர்கள், ஜப்பான் ட்ரிடியம் கலந்த தண்ணீரை கடலில் கலப்பது, கடலின் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடும் எனவும், அண்டை நாட்டு மக்களின் உடல்நலனை பாதிக்கும் எனவும் கூறுகிறார்கள். தென்கொரியா, இதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், இது தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது. 

 

அதேநேரத்தில் அமெரிக்கா, ஜப்பானின் முடிவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஜப்பானின் அணுகுமுறை சர்வதேசத் தரத்தில் இருப்பதாகக் கூறியுள்ளது. மேலும் சர்வதேச அணுசக்தி நிறுவனம், ஜப்பானின் திட்டத்தை, மனித நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், நிறைவேற்ற உதவுவதாகத் தெரிவித்துள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.