இராக் நாட்டில் கடந்த மாதத் தொடக்கத்திலிருந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது தற்போது அது பெரியளவில் உலக கவனம் ஈர்த்துள்ளது.

Advertisment

iraq

இராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும், அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தி இந்த போராட்டங்கள் இராக்கில் நடைபெறுகிறது.

Advertisment

இந்நிலையில் பாக்தாத்தில் சனிக்கிழமை முதல் நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் இராக் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டோர் விரட்டியடிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் தங்க பயன்படுத்திய டெண்டுகள் தீ வைக்கப்பட்டன.

இந்த போராட்டங்களின் காரணமாக தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இராக்கின் மனித உரிமைகளுக்கான இண்டிபெண்டன் உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.

Advertisment