Skip to main content

பயங்கரவாதியின் பயங்கர எடை... லாரியில் ஏற்றி கைது செய்த போலிசார்!

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்கம் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் நிலையில், அந்த அமைப்பின் முக்கிய நபரை ஈராக் அரசு தற்போது கைது செய்துள்ளது. அமெரிக்க படைகள் மற்றும் ஈராக் பாதுகாப்பு படையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில் அடிக்கடி ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வந்தனர்.



இந்நிலையில், ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவரான அபு அப்துல் பாரி என்பவரை ஈராக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ஐஎஸ் அமைப்பின் சார்பில் குண்டு வெடிப்புக்களை நிகழ்த்தும் பிரிவுக்கு தலைவர் பொறுப்பேற்றிருந்தார் என்று கூறப்படுகிறது.  இவரை கைது செய்த காவல்துறையினர், அவரின் உருவ அமைப்பு பெரியதாக இருந்ததால் அவரை லாரியில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர். இவரின் எடை 250 கிலோ என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு; ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தொடர்பில் ஷரீக்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

 Mangalore cooker incident; Shariq in relation to IS terrorists; Shocked at the trial

 

கர்நாடகா மாநிலத்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் 19/11/2022 அன்று மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

இந்தச் சம்பவம் தொடர்பாக கர்நாடகா மாநிலக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், தேசிய புலனாய்வு துறையின் அதிகாரிகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இது குறித்து கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தனது ட்விட்டர் பக்கத்தில், "இப்போது உறுதியாகி விட்டது. நேற்று நடந்த ஆட்டோ வெடிப்பு எதிர்பாராத விதமாக நடந்த வெடி விபத்து இல்லை. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்த 'பயங்கரவாதச் செயல். இந்த விவகாரத்தில் கர்நாடக மாநிலக் காவல்துறையினர், மத்திய அமைப்புகளுடன் இணைந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

 

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தடயவியல் துறையினர் முக்கிய ஆதாரங்கள் சேகரித்தனர். அங்கு ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில், குக்கர் ஒன்றும் சில பேட்டரிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் காரணமாக அங்குப் பதற்றமான சூழல் உருவாகியதை அடுத்து அப்பகுதி முழுவதையும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 

 

சம்பந்தப்பட்ட ஆட்டோவில் பயணித்த ஷரீக்கிற்கு நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் சிம்கார்டு வாங்கிக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நபரைப் பிடித்து தமிழகக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஷரீக் நாகர்கோவிலில் துரித உணவகத்தில் வேலை பார்க்கும் அஜிம் ரகுமான் என்பவருடன் செல்போனில் பேசியது தெரிய வந்தது. ஷரீக் மற்றும் அஹிம் ரகுமான் இடையே ஏற்கனவே தொடர்பு உள்ளதா என்றும் செல்போனில் என்ன பேசி இருப்பார்கள் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

மேலும், என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில் ஷரீக் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் குக்கர் வெடிகுண்டுடன் வீடியோக்களை வெளியிட்டு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியது தெரியவந்துள்ளது. குண்டு வெடிப்பிற்கு முன்னதாக ஷரீக் ஒத்திகை பார்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.