Advertisment

ஒரு மணி நேரத்திற்கு 50 பேருக்கு பாதிப்பு... கரோனாவால் கையை பிசையும் ஈரான்!

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Advertisment

ஆனாலும் கரோனா தாக்குதலுக்கு உயிரிழப்புக்கள் தொடர்கின்றது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 170 நாடுகளுக்கு மேல் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில் ஈரானில் இதன் பாதிப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்நாட்டில் வைரஸ்தாக்குதலுக்கு ஒரு மணி நேரத்திற்கு 50 பேர் பாதிக்கப்படுவதாகவும், 10 நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisment
corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe