Skip to main content

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச பஸ் பயணம்...புதிய முயற்சி

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
plastic bottles


இந்தோனேஷியாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க ஒரு புதுவிதமான முயற்சியை கையாண்டிருப்பது உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வருகிறது.
 

கடந்த 2015ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான தீவுகளில் நடைபெற்ற ஒரு ஆய்வில், இந்தோனேஷியா தீவுதான் மிகவும் மோசமான மாசுவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து இந்தோனேஷியாவில் இருக்கும் மாசுவை அகற்ற வேண்டும் என்று பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்துவந்தது. தீவுகள் முக்கால்வாசி பிளாஸ்டிக் குப்பைகளால் சூழப்பட்டிருந்ததால், முதலில் அதை தடுக்க பல திட்டங்கள் வகுத்தது. 
 

இந்தோனேஷியா அரசு, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க, மறுசுழற்சி முறையை கொண்டுவந்தது. பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதித்தது. ஆனால், இந்த முயற்சிகள் எந்தவித பலனையும் அளிக்கவில்லை. தற்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க புதிய யுக்தியை கொண்டு வந்துள்ளது இந்தோனேஷியா அரசு. அது என்ன என்றால், பஸ்ஸில் பயணம் செய்ய டிக்கெட்டுக்கு காசு தேவையில்லை 10 பிளாஸ்டிக் பாட்டில்கள் கொடுத்தாலே இரண்டு மணி நேரம் பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. இரண்டு மணி நேரத்துக்குள் குறைந்த தூரம் பயணம் செய்ய ஐந்து பிளாஸ்டிக் பாட்டில்களே போதுமானது.
 

இவ்வாறு செய்வதால், ஒரு நாளைக்கு குறைந்தது 250 கிலோ பிளாஸ்டிக் பாட்டில்கள் பயணிகளிடம் இருந்து பெறப்பட்டால் மாதத்திற்கு சுமார் 7.5 டன் வரை சேகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நூதன நடவடிக்கையால் சுற்றுசூழலை பாதுகாப்பதுடன் மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்த முடியும் என்று அரசு எதிர்பார்த்திருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஐஸ்கிரீம் டப்பாவில் சிக்கிய தலை; எலிக்கும் பிளாஸ்டிக் கேடு

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
 head stuck in an ice cream can; Plastic is bad for rats

மனிதர்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்ற விலங்குகளுக்கும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். குறிப்பாக வனத்துறை பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும், கடல் பகுதிகளில் குப்பை கூளமாக தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் பொருட்களால் கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புதுச்சேரியில் சாப்பிட்டு விட்டு தூக்கி எறிந்த ஐஸ்கிரீம் டப்பாவில் தெரியாமல் தலையை மாட்டிக் கொண்ட எலி அவதிப்பட்டதும் அதை அங்கிருந்த காவலர்கள் மீட்டதும் தொடர்பான  வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 head stuck in an ice cream can; Plastic is bad for rats

புதுச்சேரி கடற்கரை சாலையில் எலி ஒன்று தலையில் ஐஸ்கிரீம் டப்பாவில் தலை சிக்கியபடி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் லாவகமாக பிடித்து எலியின் தலையில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் ஐஸ்கிரீம் டப்பாவை அகற்றி மீண்டும் விட்டனர். இந்த  காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

கொட்டைப் பாக்கு கடத்தல்;ஒருவர் கைது

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

thoothukudi incident; import export

 

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்கள் பெட்டியைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் 'பஞ்சு கந்தல்' என்ற பெயரில் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து கப்பல் மூலமாக இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் ரவி பகதூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த் துறைமுகம் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர் பெட்டிகள் வந்து இறங்கியது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கொட்டைப் பாக்குகளின் மதிப்பு 4 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.