Skip to main content

15 ஆண்டுகளாக குகையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதி.... 

Published on 09/08/2018 | Edited on 09/08/2018

 

cave

 

இந்தோனேசியாவில் வசித்து வரும் தம்பதி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தங்களது 13 வயது பெண்ணுக்கு பேய் பிடித்துவிட்டது என்று ஷாமன் என்னும் மந்திரவாதியை பார்த்துள்ளனர். அதன் பின் அந்த பெண் காணவில்லை, இதைப்பற்றி மந்திரவாதி, அந்த பெண் வேலைக்காக ஜகார்தா நகருக்குச் சென்றுவிட்டாள் என்று பெற்றோரை சமாளித்துள்ளார். இதனையடுத்து அந்த மந்திரவாதி அந்த பெற்றோர்களை தொடர்புகொள்ளாமலே இருந்துள்ளார்.

 

இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் ஷாமன்(தற்போது 83வயது) மந்திரவாதி வீட்டுக்கு அருகில் இருக்கும் குகையில் இருந்து ஒரு 28 வயது பெண் மீட்கப்பட்டிருக்கிறார். விசாரணையில், மந்திரவாதி ஆம்ரின் என்ற சிறுவனின் ஆவி தனக்குள் புகுந்திருக்கிறது. அவன் உன் ஆண்மகன் என்று நம்ப வைத்து 15 வருடம் குகையில் வைத்து மந்திரவாதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணை காலையில் குகையிலும், இரவில் தன் வீட்டு அருகே இருக்கும் குடிசையிலும் தங்கவைத்துள்ளார். அப்பெண் கற்பம் ஏற்படாமல் இருக்க பலமுறை மாத்திரைகள் கொடுத்துள்ளதாகவும் சொல்கின்றனர். 

 

இதனைத்தொடர்ந்து காவல்துறை அவரின் மீது வழக்குத்தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் மந்திரவாதிக்கு 15 வருட சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது. கிராமத்தில் பிரபலமடைந்த அந்த மந்திரவாதியிடம் இதுபோன்று பலர் சிக்கி இருக்க கூடும் என அந்நாட்டின் பெண் வன்கொடுமைக்கு எதிரான தேசிய ஆணைய தலைவி சிதோரஸ் கூறியுள்ளார்.    

         

சார்ந்த செய்திகள்

Next Story

கொட்டைப் பாக்கு கடத்தல்;ஒருவர் கைது

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

thoothukudi incident; import export

 

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்கள் பெட்டியைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் 'பஞ்சு கந்தல்' என்ற பெயரில் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து கப்பல் மூலமாக இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் ரவி பகதூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த் துறைமுகம் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர் பெட்டிகள் வந்து இறங்கியது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கொட்டைப் பாக்குகளின் மதிப்பு 4 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

Next Story

நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் ஊழல்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Adani company issue in coal import

 

நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதானி நிறுவனம் ஊழல் செய்தது அம்பலமாகியுள்ளது.

 

இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த ஊழல் குறித்து இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பைனான்ஸ் டைம்ஸ் என்ற இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நிலக்கரி இறக்குமதி ஊழலில் அதானி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.

 

அதாவது இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையை இரு மடங்கு அதிகமாகக் காட்டி அதானி நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் புகார் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் இருந்து அதானி நிறுவனம் இறக்குமதி செய்யும் நிலக்கரி நேரடியாக இந்தியாவிற்கு வந்து சேரும் நிலையில், துபாய், சிங்கப்பூர் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள 4 நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக ரசீதுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் 130 டாலருக்கு வாங்கப்படும் ஒரு டன் நிலக்கரி இந்தியாவிற்கு வந்து சேரும் போது இடைத்தரகர்கள் மூலம் 169 டாலராக விலை உயர்த்தப்படுகிறது என அந்த இதழ் தெரிவித்துள்ளது.