Skip to main content

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரின் மேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைப்பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

 

 

indonesia and australia earth quake strikes

 

 


ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தோனேஷியாவின் மலுகு தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல். இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 9.10 மணியளவில் உணரப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 Powerful earthquake in Sri Lanka

 

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

 

இலங்கையின் தெற்குப் பகுதியில் கடலின் நடுப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கே 1,326 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.2 என சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகப் பதிவாகி உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Next Story

கொட்டைப் பாக்கு கடத்தல்;ஒருவர் கைது

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

thoothukudi incident; import export

 

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்கள் பெட்டியைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் 'பஞ்சு கந்தல்' என்ற பெயரில் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து கப்பல் மூலமாக இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் ரவி பகதூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த் துறைமுகம் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர் பெட்டிகள் வந்து இறங்கியது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கொட்டைப் பாக்குகளின் மதிப்பு 4 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.