Skip to main content

அத்துமீறிய இலங்கை மீனவர்கள்; அதிரடியாக கைது செய்த இந்திய கடற்படை

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

Indian Navy arrested Sri Lankan fishermen

 

இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், கடந்த 30 வருடங்களாக தமிழக மீனவர்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சனையாக உள்ளது. தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். அப்போது,  எல்லை தாண்டி வந்துவிட்டதாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

 

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று இலங்கை அரசு சார்பில் பல முறை உத்தரவாதங்கள் அளித்தும், இதுவரை பலன் கிடைத்தபாடில்லை. பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். தமிழக மீனவர்களின் படகுகளை உடைப்பது, மீன் வலைகளைக் கிழிப்பது போன்ற வன்முறை செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒருவித பயத்துடன் தான், தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றனர்.

 

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நடந்த ஒரு சம்பவம், தமிழக மீனவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. எப்போதும், எல்லை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்கள்தான் கைது செய்யப்படுவார்கள். ஆனால், தற்போது அதற்கு மாறாக தூத்துக்குடி நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் 5 பேரை,  இந்தியக் கடற்படை அதிரடியாக கைது செய்துள்ளது. இலங்கை கடல் எல்லையை தாண்டி, தமிழக எல்லையில் மீன் பிடித்ததாக கூறி, மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீலால் மற்றும் சுதீஷ் சியான் ஆகிய 5 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்,  தூத்துக்குடி தருவை குளம் கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டு,  அவர்களிடம் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.