Skip to main content

ஒரே நாளில் கோடீஸ்வரர்..! ஒரு லாட்டரி சீட்டால் மாறிய இந்தியரின் வாழ்க்கை...

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

அபுதாபியில் வேலை பார்த்து வரும் இந்தியர் ஒருவருக்கு லாட்டரி சீட்டு குலுக்கலில் 18 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

 

lottery

 

 

அபுதாபியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெற்று மாதம்தோறும் குலுக்கல் நடைபெறும். அந்த வகையில் இந்த மாதத்திற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதில் சஞ்சய் நாத் என்ற இந்தியருக்கு முதல் பரிசு விழுந்துள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 18 கோடி ரூபாய் ஆகும். இந்த குலுக்கலில் வங்கதேசத்தை சேர்ந்தவருக்கும் இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. இதுபோல அரபு நாடுகளில் இந்தியர்கள் பரிசு வெல்வது முதன்முறை அல்ல. ஏற்கனவே இது போல 10 இந்தியர்கள் கோடிகளில் பரிசு வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

அபுதாபியில் முதல் இந்து கோவில்; பிரதமர் மோடி திறந்து வைத்து வழிபாடு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
First Hindu temple in Abu Dhabi and Worship by Prime Minister Modi

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக நேற்று (13-02-24) ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி) சென்றார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அவர் அபுதாபிக்கு சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் முகமது பின் சயீத் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.  

அதன் பின்பு, இன்று (14-02-24) மதியம் அங்கு நடைபெறும் உலக உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். இதனையடுத்து, இன்று  மாலை பி.ஏ.பி.எஸ். அமைப்பு சார்பில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார். இதன் பிறகு, மஹந்த் சுவாமி மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அதற்கு முன்னதாக, அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 

அபுதாபி சுவாமி நாராயண் கோவில் வட இந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகத்தின் கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, அபுதாபிக்கு சென்றிருந்தபோது அதிபர் முகமது பின் சயீத், அபுதாபியில் இந்து கோவிலைக் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்தார். இத்துடன், கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு தானமாகக் கொடுத்தது. இதையடுத்து, மொத்தம் 27 ஏக்கர் நில பரப்பளவில் சுவாமி நாராயண் கோவில் என்ற இந்து கோவிலைக் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கேரளா லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் மீது வழக்குப் பதிவு

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

 A case has been registered against a teenager who was involved in selling Kerala lottery tickets

 

ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்று போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில் நேற்று ஈரோடு மாணிக்கம் ஹவுசிங் யூனிட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியபோது சாய்ராம் (35) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை வெள்ளைத் தாளில் எழுதி பரிசு விழும் என்று ஆசை வார்த்தைக் கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் சாய்ராம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.