ADVERTISEMENT
அந்த பதிவில், “இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் மக்களின் இதயமான மிர்பூரில் இருந்து வணக்கம். 70 சதவீதம் பேர் இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தானியர்களில் மிர்பூரைச் சேர்ந்தவர்கள். புலம்பெயர்ந்தோரின் நலன்களுக்கு நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது மிகவும் முக்கியமானது” என குறிப்பிட்டு அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
ADVERTISEMENT
இந்த நிலையில் ஜேனி மேரியட்டன் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஜேனி மேரியட்டன் சென்றது கடும் கண்டனத்துக்குரியது. இந்தியாவின் இறையான்மைக்கு எதிரான இத்தகைய மீறல் ஏற்று கொள்ள முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Show comments