Skip to main content

மோடி பிரதமராக கிடைத்ததற்கு இந்தியாவே பெருமைப்படவேண்டும் -டேவிட் கேமரூன்

Published on 20/07/2018 | Edited on 20/07/2018

 

former president

 

 

 

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய வர்த்தக சேம்பர் கூட்டத்தில் பங்குபெற்ற இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் கூறுகையில், தெளிவான எண்ணங்கைளையுடைய தலைவராக இந்திய பிரதமர் மோடி திகழ்கிறார். இந்தியாவில் நடைபெறும் நீண்டகால பிரச்சனைகள் பற்றிய கவனங்களில் அவர் மிகவும் சிறப்பான வெளிப்பாடுகளையும், தெளிவான முறைப்படுத்தல்களையும் கையாண்டு வருகிறார் என கூறிய டேவிட் கேமரூன். இந்தியா மோடியை பிரதமராக பெற்றதற்கு பெருமைப்படவேண்டும் என புகழாரம் சூட்டினார்.

 

அதேபோல் இந்தியாவின் திறன் மேம்பாட்டு வளர்ச்சியை பெருமைப்படுத்தி பேசிய கேமரூன் திறன் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அரசுக்கு இருக்கும் பங்கை போல மக்களுக்கு பங்குள்ளது எனவே இதில் மக்களும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்