13வது இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக மோடி ஜப்பா சென்றுள்ளார். இந்நிலையில், ஜப்பான் பிரதமர் அபேவின் அலுவலகத்தில் மோடி தனது குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னதாக இந்தியாவில் இருந்து வந்திருக்கும் மோடியை வரவேற்கும் விதமாக பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பு படையினரின் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதனையடுத்து இருநாட்டுக்கும் இடையே நட்புறவு வளர்க்கும் விதத்தில், பாதுகாப்பு துறை என்று பல்வேறு துறைகள் சம்மந்தமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் பத்திரிகையாளர்கள் முன்பு கையெழுத்தானது.