தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி உள்ளிட்ட மூன்று நாடுகளை ஒரே இரவில் தலைகீழாக திருப்பிபோட்டது இடாய் புயல்.

Advertisment

malawi

இந்த புயலில் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, சாலைகள் இல்லாத பகுதிகளில் சிக்கி தவிப்பதாக ஐ.நா சபை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வந்த தகவலின்படி இதில் 150 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் தற்போது இதில் 300 பேர் இறந்ததாகவும், மேலும் 200 பேருக்கு மேல் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.