ADVERTISEMENT

"உன் குழந்தைகளை கொன்றுவிடுவேன்"- கனடாவில் இந்திய ஜோடிக்கு மிரட்டல்!  

10:35 AM Aug 01, 2018 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல நாட்டு மக்களை ஏற்றுக்கொள்ளும் நாடுகளில் கனடாவும் முதன்மை வகுக்கிறது. கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்களும், இலங்கையைச் சேர்ந்த தமிழர்களும் பெரும்பான்மையான அளவில் வசித்து வருகின்றனர். இவ்வளவு ஏன் கனடா நாடாளுமன்றத்தில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட அமைச்சர்கள் பலர் இருக்கின்றனர். தற்போது சிரியாவைச் சேர்ந்த அகதிகளுக்கு தஞ்சம் கொடுத்து வருகிறது கனடா.

கனாடா, ஹாமில்டன் நகரைச்சேர்ந்த கனடாக்காரர் இந்தியாவை பூர்விகமாகக்கொண்ட ஜோடியை இன வெறியுடன் மிரட்டியுள்ளார். மிரட்டும்போது, " உங்கள் நாட்டிற்கே திரும்பிப்போய் விடுங்கள், உங்கள் குழந்தைகளை கொன்றுவிடுவேன்" என்று கூறியுள்ளார்.இந்த ஜோடி காரை பார்க் செய்யும் இடத்தில் அந்த கனடாக்காரரின் காரை ஓட்டி வரும் வழியே குறுக்கே வந்ததால் இப்பிரச்சனை ஆரம்பித்துள்ளது என்கின்றனர். தற்போது காவலர்கள் அந்த கனடாக்காரர் மீது, இன துவேசத்தை வெளிப்படுத்தியதால் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT