Skip to main content

“மீண்டும் அவரை இழக்க மனமில்லை”- கணவரின் அஸ்தியைச் சாப்பிடும் வினோத பெண்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

"I don't want to lose him again" - Strange woman eating her husband's ashes


அமெரிக்காவின் டென்னசியைச் சேர்ந்த கேசி எனும் பெண், சீன் என்பவரைக் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணம் ஆனால் சிறிது காலத்திலேயே சீன் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதன் பின்னர் சீனின் உடல் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்தியை கேசியிடம் கொடுத்தனர். 

 

தன் கணவர் மீது மிகுந்த அன்பு கொண்ட கேசி, அவரது அஸ்தியைச் செல்லும் இடங்களுக்கெல்லாம்  கொண்டு சென்றார். மேலும் தினமும் தூங்கும்போதும் கூட  தனது கணவரின் அஸ்தியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவார். ஒரு நாள் தனது கணவரின் சாம்பலைக் கலசத்திற்கு மாற்றம் செய்யும் பொழுது கேசியின் கைகளில் கணவரின் சாம்பல் சிதறியது. அதனையடுத்து அந்த சாம்பலைத் துடைக்க விரும்பாத கேசி அதனைத் தனது நாவினால் சுவைத்துள்ளார். அதிலிருந்து அந்த சாம்பலைச் சுவைப்பதைக் கட்டுப்படுத்த முடியாத கேசி தினமும் குறைந்தது ஐந்து முறையாவது அந்த சாம்பலைச் சுவைக்கத் தொடங்கியுள்ளார். 

 

அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியில் இவரின் இந்த வினோதமான செயல் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தனது செயல்பாடுகள் குறித்து விவரித்தார். அவர் தெரிவித்ததாவது, “இது (அஸ்தி) என்னுடைய கணவர். அவரை அழிக்க விரும்பவில்லை. அதனால் அவரை சுவைக்க ஆரம்பித்தேன். கடந்த இரண்டு மாதங்களாக இந்த செயலை செய்து வருகிறேன். என்னால் அதனை நிறுத்தமுடியவில்லை. அது மணல் போன்று இருந்தாலும் அந்த சுவை எனக்குப் பிடித்திருக்கிறது. அவர் ஏற்கனவே ஒரு முறை இழந்துவிட்டேன். இந்த செயலால் மீண்டும் அவரை இழக்க எனக்கு மனம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பழக்கத்தால் அவர் தனது உடல் எடையில் 19கிலோ குறைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.