Skip to main content

கள்ளக்காதலை கண்டித்த மனைவியை யோகா பந்தால் கொலை செய்த கணவன்;திடுக்கிடும் கொலை பின்னணி!!

Published on 24/08/2018 | Edited on 24/08/2018

யோகாவிற்கு பயன்படுத்தும் பந்தை வைத்து மனைவி மற்றும் மகளை கொலை ஆண் செய்த சம்பவம் பல்வேறு விசாரணைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

சீனாவில் ஹாங்காங் நகரில் கடந்த 2005-ஆண்டு காரில் ஒரு பெண்ணும் அவரது மகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது ஆனால் எந்த தடயங்களும் கிடைக்காததால் எந்த விதமுன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில்  அண்மையில் அவர்கள் அதிக நேரம் கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததால் இறந்தார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துருப்பை பயன்படுத்தி போலீசார் நடத்திய ஆய்வில் அவர்கள் இறந்து கிடந்த காரில் யோகாவிற்கு பயன்படுத்தப்படும் பந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.

 

 Startling murder playback

 

 

 

அதனை அடுத்து தொடர்ந்த விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் ஹா கிம்-சன்  தான் கொலை செய்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஹாங்காங்கில் மயக்கவியல் நிபுணராக உள்ள அவர் இந்த கொலை நடப்பதற்கு முன் யோகா பந்துகளை தான் பணியாற்றிய ஆய்வகத்திற்கு எடுத்து சென்று கார்பன்மோனாக்ஸைடு காற்றை நிரப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி அங்கு வேலை செய்தவர்களிடம் போலீசார் விசாரித்ததில் வீட்டில் எலி தொல்லையை கட்டுப்படுத்த கார்பன் மோனாக்சைடு தேவை என்று கூறியதாக தெரிவித்துள்ளது.

 

அவருக்கு வேறுஒரு பெண்ணுக்கும் ஏற்பட்ட கள்ள உறவை மனைவி கண்டித்ததால் அவரை கொல்ல திட்டமிட்ட ஹா அவர் காரில், தான் யோகா பந்தில் நிரப்பிவந்த  கார்பன் மோனோசைட்டை திறந்து விட்டு கார் கதவுகளை பூட்டியுள்ளார். அந்த காற்றை சுவாசித்த அவரது மனைவி இறந்துள்ளார். அதில் மற்றோரு பரிதாபம் அவரது மகளும் அந்த காற்றை சுவாசித்து காரில் இறந்துள்ளார் என்பதுதான்.  

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.