ஆஸ்திரேலிய நாட்டில் சமீபத்தில் வரலாறு காணாத காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் பல லட்சம் மரங்கள் எரிந்து சாம்பல் ஆனது. 50 கோடிக்கும் அதிகமான விலங்குகள் தீயில் கருகி சாம்பலாகியது. மேலும் அங்கிருந்த விலங்குகள் பல்வேறு பகுதிகளுக்கு தப்பி சென்றன.

uo

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ ஒன்று காண்போரை நெஞ்சம் உருக்குவதாக இருக்கிறது. தாயை பறிக்கொடுத்த கோலா கரடி ஒன்றுக்கு நரி ஒன்று பாலூட்டுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தந்திர விஷயங்களுக்கு மட்டுமே நரியை அனைவரும் உதாரணம் சொல்லும் வேளையில், அதனுள் இருந்த தாய்மையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.