Skip to main content

ஐ-ஃபோன் யூசர்களே, இந்த அப்டேட் வந்துவிட்டதா..?

Published on 25/09/2018 | Edited on 25/09/2018

 

i

 

புதிதாக ஆப்பிள் ஐ-ஃபோன் ஐ.ஓ.எஸ். 12, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி வெளிவந்தது. இதற்கு முன்பாக ஐ-ஃபோன் ஐ.ஓ.எஸ் சீரியஸில் பல ஃபோன்கள் வெளிவந்து இருக்கிறது. அதை எல்லாம் ஐ-ஃபோன் ஐ.ஓ.எஸ் 12-க்கு அப்டேட் செய்துகொள்ளலாம், அந்த அப்டேட்க்கான வழிமுறைகளும் அப்படி அப்டேட் செய்யும்முன் ஐ-ஃபோனில் என்னென்ன விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். முதலில் ஐ-ஃபோன் சீரியஸ்களில் எதுவெல்லாம் அப்டேட் செய்யலாம் என்றால், இதுவரை வந்த அனைத்து சீரியஸ்களையும் அப்டேட் செய்துகொள்ளலாம். சரி இதை எப்படி அப்டேட் செய்வது. மிக எளிமையான சில வழிமுறைகளில் இதை செய்து முடித்துவிடலாம். முதலில் அப்டேட் செய்யும்முன் உங்கள் ஐ-ஃபோனை பி.சி.இல், யு.எஸ்.பி. கேபிள் மூலம் கனேக்ட் செய்ய வேண்டும். பிறகு உங்கள் பழைய ஐ-ஃபோனில்  இருக்கும் தரவுகளை எல்லாம் பேக்அப் எடுத்துக்கொள்ள வேண்டும், இதற்கு போதுமான ஸ்டோரேஜ் அளவை வைத்திருக்க வேண்டும். அப்டேட் செய்வதற்கு ஐ-க்ளோவ்வுட் (iCloud) அல்லது ஐ-டியுன்ஸ் (iTunes) ஆகியவைகளை பயன்படுத்தி வைஃபை முலம் அப்டேட் செய்துகொள்ளலாம். முதலில் செட்டிங்ஸ்->ஜெனரல்->சாஃப்ட்வேர் அப்டேட் அதன் பிறகு ஓகே செய்து அப்டேட் செய்துகொள்ளலாம். அதிகமானோர் அப்டேட் செய்வதால், சாஃப்ட்வேர் டவுன்லோட் ஆவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக உங்கள் பாஸ்வர்ட் மற்றும் யூசர் ஐ.டி இரண்டையும் நினைவில்கொள்ள வேண்டும்.  

சார்ந்த செய்திகள்

Next Story

சார்ஜர் இல்லாமல் ஐ போன்... ஆப்பிளுக்கு 19 கோடி அபராதம்

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

 iPhone without charger... Apple fined 19 crores!

 

சார்ஜர் இல்லாமல் ஐ போன் விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் அரசு.

 

சார்ஜர் உடன் மட்டுமே செல்போன் விற்க வேண்டும் என பிரேசில் அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் ஐ போனுக்கு கூடவே அதற்கான சார்ஜரை வழங்கினால் எண்ணிக்கை அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் தங்களால் செல்போனுடன் சார்ஜரை விற்க முடியாது என பிரபல நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து வந்தது. ஆனால் சாம்சங் தனது புதிய போனை சார்ஜர் உடன் விற்று வருகிறது. இந்நிலையில் சார்ஜர் இல்லாமல் ஐ போன்-12 மாடலை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் அரசு, சார்ஜர் இல்லாத அனைத்து ஐபோன் விற்பனைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.

 

 

Next Story

ஆப்பிளின் புதிய ஐஃபோன்- 13 சென்னையில் தயாராகிறது!

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

Apple's new iPhone 13 is ready in Chennai!

 

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோனான ஐஃபோன்- 13 உற்பத்தி, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கியுள்ளது. 

 

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒப்பந்த முறையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து தரும், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது ஆப்பிள் ஐஃபோன்- 13 உற்பத்தி செய்து தர தொடங்கியுள்ளது. இதையடுத்து, ஐஃபோன்களின் முன்னணி மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் சென்னை ஆலையில் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

சென்னையில் ஃபாக்ஸ்கான் உள்பட மூன்று ஒப்பந்த நிறுவனங்களில் ஆப்பிள்களின் ஐஃபோன்கள் உற்பத்திச் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஸ்ரீபெரும்புதூரில் ஐஃபோன் 13 உற்பத்தி நமது பயணத்தின் மற்றொரு மைல்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும், உலகத்துக்கும் மேக் இன் தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக்கில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.  

 

இந்திய செல்போன் சந்தையில் ஆப்பிள்களின் சந்தை பங்கும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.