Skip to main content

வீட்டிலிருந்தால் பரிசு, வெளியே சென்றால் அவ்வளவுதான்... மக்களைக் காக்க அரசு போட்ட திட்டம்...

Published on 27/03/2020 | Edited on 07/09/2021

கரோனா தடுப்பு நடவடிக்கையில் சீனாவுக்கு அண்டை நாடான தைவான் பின்பற்றும் நடைமுறை பல்வேறு நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 


 

how taiwan controlling corona

 

 

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்துள்ள சூழலில், இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 24,000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசின் பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் மிகவும் சிறிய மற்றும் மக்கள்தொகை குறைந்த நாடான தைவான், தங்கள் நாட்டு மக்களை வீட்டிலேயே தங்கவைக்க பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி கரோனா அறிகுறிகளுடன் உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், கரோனா அறிகுறி உள்ளவர்கள் இருப்பிடம் குறித்த தரவுகள் ஆன்லைன் வழியாகக் கண்காணிக்கப்படுகின்றன. ஒருவேளை கண்காணிப்பில் உள்ளவர் தனது இருப்பிடத்தை விட்டு வெளியே சென்றால் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு உடனடியாக மொபைல் வழியாகத் தகவல் அனுப்பப்படும். உடனடியாக கண்காணிப்பில் உள்ளவரின் இருப்பிடத்தை அதிகாரிகள் சோதனை செய்வர். கண்காணிப்பில் உள்ள நபர் ஒருவேளை வீட்டில் இல்லை என்றால் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 24 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர்.

அதேநேரம் மக்களை வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பதற்கும் அந்நாடு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. விதிகளைப் பின்பற்றி வீட்டிலேயே இருப்பவர்களுக்குப் பரிசாகப் பணம், நொறுக்குத்தீனி, நூடுல்ஸ், இணையதளத்தில் இலவசமாகப் படம் பார்க்கும் வசதி, இலவசமாக கேம்கள் விளையாடும் வசதி  ஆகியவையும் ஏற்பாடு செய்துதரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அந்நாட்டில் நல்ல பலனையும் கொடுத்துள்ளது என்கின்றனர். சீனாவின் அண்டை நாடான தைவானில் இதுவரை 267 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Powerful earthquake in Japan

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. சுமார் 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கின. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி  இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  படுகாயம் அடைந்த 800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் முன்னெச்சரிக்கையாக இந்தோனேசியா மற்றூம் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகின. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளொகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. 

Next Story

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Powerful earthquake in Taiwan; Tsunami warning in Japan

தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கி உள்ளன. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.