Skip to main content

போலீஸ் ஸ்டேஷனாக மாற உள்ள ஹிட்லரின் வீடு!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரியா அரசு முடிவு செய்துள்ளது. பல யூதர்களை கொன்று குவித்தவர் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர். அவருக்கு சொந்தமான ஆஸ்திரியாவில் பிரனவ் ஆவ் இன் என்னும் நகரத்தில் உள்ள அவரது பிறந்த வீட்டை ஆஸ்திரியா அரசு காவல் நிலையமாக மாற்றவுள்ளது.



முன்னதாக ஆஸ்திரியா அரசு இந்த கட்டிடத்தை மொத்தமாக விலை கொடுத்து வாங்கி அதனை அகதிகளுக்கான மறுவாழ்வு மையமாக மாற்ற முயற்சித்தது. ஆனால் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு, கட்டாய விற்பனை உத்தரவின் மூலம் அந்த கட்டிடத்தை 8,10,000 யூரோக்களுக்கு ஆஸ்திரியா அரசு கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இதனை காவல் நிலையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹிட்லர் ஒலிம்பிக்ஸ்! ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி? #7

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

சர்வாதிகாரி ஆகி விட்டால் போதுமா? சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளினைப் போலவே, உலகப் பத்திரிகைகள் ஹிட்லரை சித்தரித்து வந்தன. 1935 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஹிட்லரை இது மிகவும் கவலையடையச் செய்தது. நாஜிகளின் கொடூரமான அட்டூழியங்கள் உலகப் பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பெற்றன. ஹிட்லரையும், அவரது அரசையும் கிழிகிழியென்று கிழித்தெறிந்தன. இனப்படுகொலை உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தது. கோயபல்சும், கோயரிங்கும், ஹிம்லரும், ருடால்ப் ஹெஸ்ஸும் ஹிட்லரை இறகுப்பந்துபோல பயன் படுத்துவதாக கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டன. மற்றொரு பக்கம் ஹிட்லரின் பேச்சுக்களை அலசி ஆராய்ந்து, அவர் போருக்கு தயாராகி வருவதாக கட்டுரைகள் எழுதப்பட்டன.

ஹிட்லருக்கு போர் புரியவேண்டும் என்ற எண்ணம் இருந்தது உண்மைதான். ஆனால், ஜெர்மனியின் தொழில்வளத்திற்கு கச்சாப் பொருள்களை வெளிநாட்டில் இருந்துதானே வாங்கியாக வேண்டும்? கொஞ்சம் அடக்கி வாசித்து, பிறகு எகிறலாமே. தொழில் அதிபர்கள் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய அனுமதி கொடுத்துவிட்டார். வெளிநாடுகளுக்கு ஜெர்மன் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்து, அதற்குப் பதிலாக கச்சாப் பொருள்களை வாங்கிக் கொள்ள முடிவு செய்தார். அதற்கு, வெளிநாடுகளின் மதிப்பைப் பெற வேண்டுமே.
 

fgh



பிரான்சிடம் பேசிப் பார்க்கலாம் என்று முயற்சி செய்தார். ஆனால், ஹிட்லரை முட்டாள் என்று கூறிவிட்டார் பிரான்ஸ் பிரதமர். அமெரிக்காவிடம் கேட்கலாம் என்றால், அங்குள்ள யூதர்களின் தயவைப் பெற்றதாக ஆகிவிடும். அது தற்கொலைக்குச் சமம். என்ன பிரிட்டனைத் தாஜா செய்ய முடியுமா பார்க்கலாம். அது சாத்தியமானால் தப்பிவிடலாம் என்று முடிவு செய்தார். அதேசமயத்தில், பிரிட்டனும் ஜெர்மனியுடன் உறவுகளைப் புதுப்பிக்கலாம் என்று நினைத்திருந்தது. ஆங்கிலேயர்கள் தூய்மையான ஆரியர்கள் என்பது ஹிட்லரின் எண்ணம். இந்திய சுதந்திரப் போராட்டத்தையே மட்டமாக பேசியவர் ஹிட்லர். “இங்கிலீஷ் ஜாதி தூய்மையானது. அது களங்கமுற்று அரசு எந்திரம் நொறுங்கிப் போனால், அல்லது, பலமான எதிரி உருவானால் மட்டுமே பிரிட்டனை ஜெயிப்பது சாத்தியம். இந்தியத் தலைவர்களால் இங்கிலாந்தை எதிர்த்துப் போராட முடியாது. மற்ற வல்லரசுகளின் கீழ் இருப்பதை விட இங்கிலாந்தின் கீழ் இருப்பதே இந்தியாவுக்கு நல்லது”

இதுதான் இந்திய சுதந்திரத்தைப் பற்றி ஹிட்லரின் கருத்து. அதனால்தான், விடுதலைப் போராட்ட காலத்தில், ஹிட்லருடைய அடிப்பொடிகளாக இந்தியாவில் உருவான ஒரு கூட்டம், விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்க முன் வந்ததோ என்னவோ? பிரிட்டன் மீது இவ்வளவு உயரிய மதிப்பு வைத்திருக்கும் ஹிட்லர, அந்த நாட்டின் உறவை விரும்பியதில் வியப்பேதும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரிட்டனின் பத்திரிகைகள் கடுமையாக  எதிர்த்தன. அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலோர், பிரதமர் சாம்பர்லின் உள்பட ஹிட்லருடன் உறவை ஏற்படுத்த விருப்பம் தெரிவித்தனர். இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள ஹிட்லர் தயாராக இருந்தார். ஆனால், மக்கள் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அனுமதி மறுத்துவிட்டார்.
 

 

gh



அடால்ப் என்ற வார்த்தை வொல்ப் என்ற ஆங்கில வார்த்தையின் மருவல் என்று கூறுவார்கள். அதாவது ஓநாய் என்று அர்த்தம். இதை ஹிட்லரே அடிக்கடி பெருமையாகச் சொல்லிக் கொள்வார். பிரிட்டனுடன் உறவு என்ற தந்திரத்தைக் கையில் எடுத்தபோது, தன்னை ஓநாய் என்று அவர்கள் நினைப்பார்கள், ஆனால், நான் நரி என்பது அவர்களுக்குத் தெரியப்போவதில்லை என்று நண்பர்களிடம் கூறினார். பிரிட்டனின் மன்னர், இங்கிலாந்துக்குள் வர ஹிட்லருக்கு அனுமதி மறுத்தாலும், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜான் சைமன் ஹிட்லரைத் தவறாக எடைபோட்டு விட்டார். மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிக்கப் போவதில்லை என்று ஹிட்லர் பேசியதை அவர் நம்பினார். அதைத் தொடர்ந்து, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக ஜெர்மனியும் ராணுவபலத்தை பெருக்கிக் கொள்ள அனுமதிப்பது தவறில்லை என்று கருத்துத் தெரிவித்தார்.

“நாங்கள் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க மாட்டோம். அதேசமயம், வெர்சைல்ஸ் உடன்படிக்கையின் கீழ்  ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றிய ஸார்லாந்து உள்ளிட்ட பகுதிகளை மட்டுமே திரும்பக் கேட்கிறோம். எங்களுடைய விவசாய வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் இது மிகவும் அவசியம்” என்று நைச்சியமாக பேசிவந்தார் ஹிட்லர். சுமூகமான சூழல் உருவான நிலையில், ஜான் சைமனை பெர்லின் வரும்படி அழைத்தார் ஹிட்லர். இந்த முடிவு பிரிட்டனில் பலத்த வரவேற்பைப் பெற்றது. ஆனால், அந்தச் சந்திப்புத் தேதி நெருங்கும் நிலையில் ஹிட்லர் திடீரென்று பல்டியடித்தார். “ஜெர்மன் மீண்டும் ஆயுத உற்பத்தியைப் பெருக்கப் போகிறது. அதற்கான திட்டங்களைத் தயாரித்து வைத்துள்ளது. ஏற்கெனவே, கணிசமான அளவில் ராணுவபலத்தை ரகசியமாக அதிகரித்துள்ளது”

 

jk



இப்படித் தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை ஒன்று பிரிட்டனில் வெளியிடப்பட்டு விட்டது. இது ஜெர்மனியை அவமானப்படுத்தும் செயல் என்று ஹிட்லர் ஆவேசப்பட்டார். கடைசியில், அந்தச் சந்திப்பு நடக்காமலேயே போயிற்று. மார்ச் 16 ஆம் தேதி, ஜெர்மன் ராணுவத்திற்கு புதிதாக ஐந்துலட்சம் வீரர்களைத் தேர்வு செய்யும் வகையில் சட்டம் இயற்றினார் ஹிட்லர். “இன்றுடன் வெர்சைல்ஸ் உடன்படிக்கை செத்துவிட்டது. பிரான்சும் பிரிட்டனும் எதிர்க்கட்டும் பார்க்கலாம். அவர்களுக்கு அந்தத் துணிச்சல் இருக்கும் என்று நான் நம்பவில்லை. நாடாளுமன்றத்தில் ஹிட்லர் முழங்கியது உண்மைதான். பிரான்சும், பிரிட்டனும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அடுத்த ஒரே ஆண்டில், ஜெர்மனியின் ராணுவபலம், பிரான்சுக்கு நிகரானது. 20 ஆண்டுகளுக்கு அப்புறம் இந்த பலத்தை மீண்டும் பெற்றது ஜெர்மனி.

1936 மார்ச் மாதம் எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ராணுவம் விலக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த ரைன்லாந்தை ஜெர்மன் தன்வசப்படுத்தியது. யாரும் மூச்சுக்கூட விடவில்லை. இப்போதைக்கு போர் வராது என்று சாதாரணமாக நினைத்திருந்த பிரிட்டன், தனது படைபலத்தை குறைக்கத் தொடங்கியிருந்த காலம் அது. ரைன்லாந்தைக் கைப்பற்றி மூன்றே மாதங்கள்தான். ஜூலை மாதம், ஸ்பெயினில் உள்நாட்டு போர் மூண்டது. அந்த நாட்டின் தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோ, இத்தாலி அதிபர் முசோலினியிடம் உதவி கேட்டார். ஆனால், அவர் அப்போது எத்தியோப்பியா மீது போர் தொடுத்திருந்தார். இதை ஜெர்மனி பயன்படுத்திக் கொண்டது. பிரான்கோவுக்கு உதவ ஒப்புக் கொண்டது. பிறகென்ன அடுத்த சிலநாட்களில் ஜெர்மனியின் கையில் ஸ்பெயின். ஜெர்மனியின் லாகவாமான இந்தத் தந்திரம் முசோலினிக்கு பிடித்துவிட்டது. அவர், ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
 

ghj



இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், பெர்லின் நகரம், ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு ஜரூராகத் தயாராகி வந்தது. 1936 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதிவரை போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எத்தனையோ அல்லல்களைத் தாண்டி மிக கவனமாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, ஹிட்லரே கவனித்தார். விளையாட்டு அரங்கை அவரே வடிவமைத்தார். ஆனால், யூதர்களயும், ஜிப்ஸிகளையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்துவரும் நாஜி அரசாங்கம் நடத்தும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், செக்கோஸ்லாவாகியா, ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற நாடுகளில் யூதர்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். யூத விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்ஸில் பங்கேற்கக் கூடாது என்று யூத அமைப்புகள் தடை விதித்தன. ஏற்கெனவே, ஜெர்மனியில் அனைத்துத் தடகள விளையாட்டுகளிலும் யூதர்கள் அப்புறப்படுத்தப் பட்டிருந்தனர். ஆரியர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தனர்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதா வேண்டாமா என்று அமெரிக்கா பரிசீலனை செய்துவந்தது. பெர்லினுக்கு ஒரு குழுவை அனுப்ப, அது முடிவு செய்திருந்தது. ஹிட்லர் சுதாரித்துக் கொண்டார். சர்வதேச நன்மதிப்பைப் பெறுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார். கோயபல்ஸ் தனது திறமையை இந்தப்பக்கம் திருப்பினார். ஒலிம்பிக்ஸ் ஏற்பாடுகள் குறித்து பக்கம்பக்கமாக செய்திகள் வெளிவரும்படி பார்த்துக் கொண்டார். “யூதர்களுக்கு அனுமதி இல்லை” என்று எழுதி வைக்கப்பட்டிருந்த போர்டுகள் எல்லா இடங்களிலும் அகற்றப்பட்டன. ஜெர்மன் அரசு நிர்வாம் சிறப்பாக செயல்படுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டன. ஹிட்லரின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் விளம்பரச் செய்திப்படங்களை பிரமாண்டமான முறையில் எடுத்துக் கொடுக்கும் பணியில் லெனி ரீபென்ஸ்டால் என்ற பெண்மணி ஈடுபட்டிருந்தார்.

அவருடைய படங்கள், ஹிட்லரின் தேர்தல் வெற்றிக்கும், வெளிநாட்டினர் மத்தியில் செல்வாக்கைப் பரப்புவதற்கும் பெரிய அளவில் உதவியாக இருந்தன. யூதர்களுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டன. இது நாடகம் என்று ஈனஸ்வரமாக எழுந்த குரல்கள், ஆரவாரக் கூச்சலுக்கு மத்தியில் எடுபடாமல் போயிற்று. பெர்லின் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பது என்று அமெரிக்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து உலக அளவில் எழுந்த எதிர்ப்புகள் அனைத்தும் ஒடுங்கிவிட்டன. 11 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. ஹிட்லர் தனது படை பரிவாரங்களுடன் பிரமாண்டமான அரங்கிற்குள் நுழைந்தார். பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து, வலது கையை உயர்த்தி “தலைவர் வாழ்க” என்றனர். வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அசந்துவிட்டனர். இப்படி ஒரு தலைவனா?

 

hj



மொத்தம் 49 தடகளக் குழுக்கள் பங்கேற்றன. ஜெர்மனியின் சார்பில் 348 வீரர்கள் கலந்துகொண்டனர். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா சார்பில் 312 பேர் பங்கேற்றன. பெரும்பகுதி பதக்கங்களை ஜெர்மனி வாரிக்குவித்தது. ஹிட்லர் நடுநிலையாளர் போல தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இந்தப் போட்டி ஜெர்மனியின் உலகளாவிய அந்தஸ்த்தை உயர்த்துவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. இதைப் புறக்கணிக்கமால் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் கலந்துகொண்டது தவறு என்று பின்னாளில் பேசப்பட்டன. ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்ததுதான் தாமதம். ஹிட்லரின் என்ஜினீயரிங் மூளை வேகமாக திட்டங்களைத் தீட்டத் தொடங்கியது. யூதர்கள் மீதான வெறித்தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. கொத்துக் கொத்தாக அள்ளிச் சென்றனர். ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டனர். அங்கு கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். சாப்பாடு இல்லாமல் உயிர் இருக்கும்வரை உழைத்துவிட்டு செத்துப்போகும்படி விடப்பட்டனர்.

ஏற்கெனவே, நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டிருந்தன. இப்போது, ஹிட்லரின் கவனம் ரயில்பாதைகளில் திரும்பியது. பிரிட்டனின் தி கிரேட் ரயில்வேக்கு சொந்தமான பாதைகள்தான் உலகில் அகலமானவையாக கருதப்பட்டு வந்தன. அதைவிட அகலமான ரயில்பாதைகளை ஹிட்லர் வடிவமைத்தார். குறைந்த விலையில் ஜெர்மானியர்களுக்கு கார் வழங்குவதற்காக வோல்ஸ்வேகன் காரை ஹிட்லரே வடிவமைத்தார். கட்டிடங்கள், சிறிய ரக விமானங்கள், நவீன பீரங்கிகள் என ஹிட்லரின் மூளையில் உதித்த எல்லாவற்றையும் உருவாக்க திறமையாளர்கள் நிறைந்திருந்தனர். ஹிட்லர் சொல்வார். விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், தொழிலாளர்களும் செய்து முடிப்பார்கள்.

வெளி உலகினருக்கு இதெல்லாம் தெரியாமல் போயிற்று. முதல் இரண்டு ஆக்கிரமிப்பு அளித்த போதை குறைவது போல தெரிந்தது. ஹிட்லர் சுதாரித்துக் கொண்டார். வெற்றியால் உண்டாகும் போதை குறைய அனுமதித்தால் சோர்ந்து விடுவார்கள். என்ன செய்யலாம்? தனது ஓவிய ஆர்வத்தை புரிந்துகொள்ளாமல், கல்லூரியில் சேர்க்க மறுத்த வியன்னா ஓவியக் கல்லூரி நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்வு ஹிட்லரின் நெஞ்சில் இன்னமும் வடுவாக இருந்தது.

“ஜெர்மனியுடன் இணைந்து விடுங்கள்”

1938 ஆம் ஆண்டு 12 ஆம் தேதி ஆஸ்திரிய அரசுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்தார் ஹிட்லர். வேண்டுகோளை ஏற்பதாக தெரியவில்லை. “எனக்கு ஆஸ்திரியா வேண்டும்” ராணுவத்திடம் கேட்டார் ஹிட்லர். ஜெர்மன் ராணுவத்தின் அணிவகுப்பைப் பார்த்ததுமே, ஆஸ்திரியா ஹிட்லரின் சட்டைப்பையில் வந்து விழுந்து. இதைப் பார்த்ததும் செக்கோஸ்லாவாகியா மிரண்டுவிட்டது. அடுத்து ஹிட்லரின் குறி தன்மீதுதான் இருக்கும் என்று நடுங்கியது. ஜெர்மனிடம் இருந்து எடுத்துத் தரப்பட்ட சுடடன்லாந்தை மீண்டும் ஒப்படைத்து விடும்படி செக் அதிபர் பெனோஸுக்கு தகவல் அனுப்பினார் ஹிட்லர்.

அமைதியான முறையில் அந்தப் பகுதியை மட்டும் கொடுத்திருக்கலாம் அவர். பிடிவாதம் செய்தார். மூன்று மாதங்கள் வரை பேச்சுவார்த்தை என்ற பேரில் இழுத்தடித்தார். ஹிட்லர் பொறுமை இழந்தார். ஜெர்மன் ராணுவம் உத்தரவுக்காக காத்திருந்தது. ஹிட்லர் “ம்” என்றால் எந்த நாட்டையும் கவ்விக் கொண்டுவந்து அவர் காலடியில் போட தயாராக இருந்தது ராணுவம். செக் அதிபருடன் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே, இத்தாலிக்குச் சென்றார் ஹிட்லர். ரோம் நகரில் இத்தாலி சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்தார். செக்கோஸ்லாவாகியா மீது படையெடுக்கும் பட்சத்தில்  முசோலினி எதிர்ப்பு தெரிவித்து விடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அவரே அந்தச் சமயத்தில் எத்தியோப்பியா மீது படையெடுத்த களைப்பில் இருந்தார்.

இருவரும் பரஸ்பரம் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொண்டனர். இதை அறிந்ததும், தனக்கு உதவி செய்யும்படி பிரிட்டனையும், பிரான்சையும் மன்றாடியது செக்கோஸ்லோவாகியா. ஏதேனும் செய்யுங்கள் என்று பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லினுக்கு வேண்டுகோள் விடுத்தார் பிரான்ஸ் பிரதமர். அவர் அனுப்பிய தந்தியின் நகலை இணைத்து, ஹிட்லருடன் பேச நேரம் ஒதுக்கும்படி கேட்டார் சாம்பர்லின். சாம்பரிலின் அனுப்பிய தந்தியைப் பார்த்ததும் ஹிட்லரின் உதட்டோரத்தில் எகத்தாள புன்னகை தோன்றின. “நான் வருவதை ஏற்க மறுத்த பிரிட்டிஷ் சிங்கம், இப்போது, என் சந்திப்புக்கு நேரம் கேட்கிறது”

தனக்குள் சொல்லிக்கொண்டார் ஹிட்லர். எல்லாம் ஹிட்லரின் நேரம். பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லினுக்கு வயது 70. இதுபோன்ற பயணத்தையெல்லாம் தவிர்த்து வந்தார். பெர்லினில் சந்திக்கலாம் என்றுதான் சாம்பர்லின் நினைத்திருந்தார்.

ஆனால், ஓபர்ஸல்ஸ்பர்க் மலையை ஓட்டிய பெர்காப் நகரில் சந்திக்க ஹிட்லர் ஏற்பாடு செய்தார். அங்கு செல்வதற்கே ஏழுமணி நேரம் அவர் பயணம் செய்ய வேண்டும். 1938 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அந்தச் சந்திப்பு நடந்தது. ஹிட்லர் மட்டுமே பேசினார். சாம்பர்லின் கேட்டுக் கொண்டிருந்தார். ஜெர்மனிக்கான பிரிட்டிஷ் தூதர் இருவருக்கும் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். ஜெர்மனியின் உரிமைகளைப் பற்றியே அவர் விவரித்தார். “எங்களிடமிருந்த எடுக்கப்பட்ட பகுதிகளைத்தான் கேட்கிறோம். நம் இரு நாடுகளுக்கு இடையே ஏதேனும் பிரச்சனை என்றால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” பேச்சுவார்த்தை முடிந்தது. மீண்டும் சந்திப்போம். நல்லதோர் முடிவெடுப்போம் என்று சாம்பர்லின் தெரிவித்தார். “இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே ஹிட்லர்” வியந்தபடியே லண்டன் போய்ச் சேர்ந்தார் சாம்பர்லின்.

 

 

Next Story

அட்டூழியம் ஆரம்பம்! ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி? #6

Published on 02/11/2019 | Edited on 02/11/2019


நாஜிகள் ஆட்சிக்கு வந்தால் சுபிட்சம் நிச்சயம் என்றார்களே... அப்படியெல்லாம் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஹிட்லர் சர்வாதிகாரி ஆன கையோடு, அட்டூழியம்தான் ஆரம்பமாகியது.  எங்கும் பிரவுன் சீருடை அணிந்த நாஜி அதிரடிப்படையின் ராஜ்ஜியம்தான். அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஹிட்லருக்கு முதல் குறி கம்யூனிஸ்ட்டுகள்தான். அந்தக் கட்சிக்கு தடைவிதித்தார் ஹிட்லர். ஜெர்மனியின் முக்கியமான அரசியல் சக்தியான அந்தக் கட்சியை தடை செய்தது மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் என்று யாரும் தன்னை சொலிக்கொள்ளக் கூடாது.

மீறிச் சொன்னால், கைது, சிறை, சித்திரவதை என்று மிரட்டல் விடுத்தார். உயர்மட்டத் தலைவர்கள் பலரை கைது செய்து சிறையில் அடைத்தார். மற்றவர்கள் அரண்டுவிட்டனர். தனது அவசர சட்ட மசோதாவை எதிர்த்து வாக்களித்த சமூக ஜனநாயக கட்சிக்கும் தடை. அரசியல் சதுரங்கத்தில் இஷ்டப்படி தனது எதிரிகள் என்று நினைப்பவர்களை எல்லாம் வரிசையாக ஒழிக்கும் வேலையில் அவர் தீவிரமாக இருந்தார். அதேசமயம் நாஜிகள் தங்கள் நெடுங்கால வன்மத்தை தீர்த்துக் கொண்டிருந்தார்கள். யூதர்களின் கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்குள் புகுந்து கொள்ளையடித்தனர். எதிர்த்து பேசுகிறவர்களை நடுத்தெருவில் அடித்துத் துன்புறுத்தினர். கொலையும் செய்தனர்.
 

jk



முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாரபட்சமில்லாமல் தாக்கினர். கற்பழித்தனர். கொன்று குவித்தனர். அவர்களுக்கு எதிராக எந்த புகார் கொடுத்தாலும், அது கொடுத்தவர் மீதே பதிவு செய்யப்பட்டது. இதைப்பற்றியெல்லாம் ஹிட்லருக்கு கவலையில்லை. அதிகாரம் முழுவதையும் தன்வசம் கொண்டுவர என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதிலேயே கவனமாக இருந்தார். பவேரியன் கத்தோலிக்க கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக கட்சி, மக்கள் கட்சி என்று வரிசையாக அனைத்துக் கட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. நாஜிக் கட்சி மட்டுமே இருக்க வேண்டும். ஹிட்லர் மட்டுமே தலைவராக மதிக்கப்பட வேண்டும்.

மிச்சமிருந்தது தொழிற்சங்கங்கள் மட்டும்தான். அவற்றுக்கும் தடை விதிக்க வேண்டும். ஆனால், பக்குவமாக கையாள வேண்டும். தொழிலாளர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. அதற்கான நேரம் வந்தது. மே தினம் வந்தது. தொழிலாளர்களின் தலைவராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். ஜெர்மானிய தேவதையின் குழந்தைகள் என்று தொழிலாளர்களை வர்ணித்தார். “மூளை வேலை செய்வோர், தொழிலாளர், விவசாயிகள் ஆகிய மூவரும், சமூகத்தின் அறிவு, ஆன்மா, தேகம் போன்றவர்கள். மெய்வருந்தி உழைப்பது இழிவானதல்ல. தனக்கிட்ட வேலையை உண்மையாகவும், மனப்பூர்வகவும் செய்கிறவருக்கு கூடுதல் கவுரவம்தான் கிடைக்கும்.

 

 

j



தொழில் தொண்டர் படை ஒன்று உருவாக்கப்படும். இனி தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் குறைகளை அந்த அமைப்பிடமே முறையிடலாம்.
ஜெர்மனியில் பிறந்தவர் யாராக இருந்தாலும், சமுதாயத்தின் எந்தப் பிரிவினராக இருந்தாலும், குறைந்த காலமாவது கைத் தொழிலாளியாக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களை வேலை வாங்கும் ஆற்றலைப் பெறமுடியும்” ஹிட்லரின் மே தின உரை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. அடுத்த நாள், தொழிற்சங்கங்கள் அனைத்தும் தடை செய்யப்படுவதாக அறிவித்தார். யாரும் மூச்சு விடவில்லை.

முதலாளிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டார். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வழியின்றித் தவித்தார். வேலையில்லாத் திண்டாட்டம் அப்படியே இருந்தது. நாஜிகளின் அட்டூழியம் தவிர, வேறு எதையும் மக்கள் அனுபவிக்கவில்லை. ஆயுதத்தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஹிட்லர் அறிவித்திருந்ததால், கனரக தொழிற்சாலைகள் ஆயுத உற்பத்தியைத் தொடங்கியிருந்தன. மக்களுக்கு வேலை கொடுக்க என்ன செய்வது? அவர்களுடைய அதிருப்தியை முதலில் போக்க வேண்டுமே.

 

 

jh



“யூதர்கள் ஜெர்மானியர்கள் அல்ல” நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தார் ஹிட்லர். மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களின் கணக்கைச் சேகரியுங்கள். அதில் யாரேனும் ஒருவர் யூதராக இருந்தால் நாட்டைவிட்டு ஓடிவிட வேண்டும். இல்லையென்றால் உயிரை விட வேண்டும். “எவ்வளவு காலம் அவர்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமோ, அவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டோம். ஆனால், அவர்கள் மாறவே இல்லை. அவர்களுடைய விதி விரைவில் முடிவு செய்யப்படும்” என்றார். யூதர்கள் நடத்தும் கடைகளை மற்றவர்கள் அனவரும் புறக்கணிக்க வேண்டும். ஆரியர் எனப்படும் ஜெர்மானியரின் வளாகத்திற்குள் யூதர் எவரேனும் இருந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு கான்ஸன்ட்ரேஷன் முகாமுக்கு அனுப்பப்படுவார்கள்.

அங்கு போய்விட்டால் அப்புறம் என்னவானார் என்பதே வெளியே தெரியாது. யூதக் குடியிருப்பில்தான் யூதர்கள் வசிக்க வேண்டும் வெளியே தலை காட்டக் கூடாது. நடக்கப்போவதை முன்கூட்டியே யூகித்த பல்லாயிரக்கணக்கான யூதர்கள் வேறு நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். மிகச்சிறந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசை மேதைகள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என எல்லோரும் ஓடிவிட்டனர். யூதர்கள் தங்களுடைய இஸ்ரேல் முத்திரையை உடையில் அணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது. நாஜி அதிரடிப்படையினர் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள வசதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

jk



ஜெர்மனியின் இந்த கொடூரமான இனவெறி உத்தரவு, பக்கத்து நாடுகளை ஆவேசப்படுத்தியது. ஆனாலும், அவை வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தன. வெளியேறும் யூதர்களுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும்தான் அடைக்கலமாக இருந்தன. ஆனால், அவர்களுக்கு பரிந்து ஜெர்மனியை கண்டிக்கக்கூட அவை முன்வரவில்லை. ஆயிரக்கணக்கான யூதர்களின் கதி என்னாயிற்று என்றே தெரியவில்லை. கான்சென்ட்ரேஷன் முகாம் என்று அழைக்கப்பட்ட சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் அங்கேயே கொல்லப்பட்டு, அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டனர்.

யூதர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை எல்லாமட்டத்திலும் விரிவடைந்தது. ராணுவத்தில் இடம்பெற்றிருந்த யூதர்கள் முதலில் வெளியேற்றப்பட்டிருந்தனர். அரசு வேலைகளில் இருந்தவர்கள், தொழிற்சாலைகளில் வேலை பார்த்தவர்கள், வங்கிகளில், வர்த்தக நிறுவனங்களில் என எல்லா இடங்களிலும் யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய இடங்களில் ஜெர்மானியர்களர் நியமிக்கப்பட்டனர். இதுதான், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஹிட்லர் போக்கிய லட்சணம். யூதர் ஒருவர் கடை நடத்தினால், அந்தக் கடையை நாஜிக் கட்சியின் செல்வாக்குப் பெற்ற யாரேனும் ஒருவர் அபகரித்துக் கொள்ளமுடியும்.

அவர்கள் நடத்திய வங்கிகள், தொழிற்சாலைகள், அவர்களுடைய சொத்துக்கள் அனைத்தும் அரசு அபகரித்துக் கொண்டது. இந்தக் கொடுமை நடந்து கொண்டிருக்கும்போதே, ஜூலை மாதம் 20 ஆம் தேதி, ரோம் நிர்வாகத்துடன் ஹிட்லர் ஒரு ஒப்பந்தம் செய்தார். ஜெர்மனியில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்த மாட்டோம் என்று உறுதி அளித்திருந்தார் ஹிட்லர். ஆனால், வாக்குறுதியெல்லாம் ஹிட்லருக்கு எம்மாத்திரம். ஐந்தே நாளில் அதைக் காற்றில் பறக்கவிட்டார். கத்தோலிக்க இளைஞர் கழகம் சட்டவிரோதமானது என்று அறிவித்தார். ஒழுக்கக் கேடாக நடந்துகொண்டனர் என்று குற்றம்சாட்டி, கத்தோலிக்க கன்னிமாரையும், பாதிரியார்களையும் கைது செய்தனர். அரசுக்கு எதிராக சதி செய்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
 

j



மார்ட்டின் லூதர் கிங் மீது ஹிட்லருக்கு மிகுந்த பற்று உண்டு. கிறிஸ்தவ மதத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்று கூறுவார். ஆனால், புராட்டஸ்ட்ன்ட்டுகளும் அவரிடமிருந்து தப்ப முடியவில்லை. ஜெர்மன் தேசிய தலைமைத் தேவாலயம் ஒன்றை அமைக்க வேண்டும். அங்கு ஏசு படங்களோ, சிலுவைகளோ இருக்கக் கூடாது. பாதிரியார்களுக்கு பதிலாக தனது கட்சியின் சொற்பொழிவாளர்கள் ஹிட்லர் வேதம் போதிப்பார்கள். பைபிளுக்கு பதிலாக ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்று நூலான மெயின் கேம்ப் வாசிக்கப்படும்.

ஹிட்லரின் கேலிக்குரிய இந்த ஆசை, அவரை தொடக்கத்தில் ஆதரித்த கிறிஸ்தவ மதத் தலைவர்களையும் எதிரியாக்கியது. இது ஒருபுறமிருக்க, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களை அறிவித்தார். ஜெர்மனி முழுவதும் மிக அகலமான நெடுஞ்சாலைகளை அமைக்க உத்தரவிட்டார். ஆனால், தொடக்கத்திலிருந்தே ராணுவத்தில் குழப்பம் நீடித்து வந்தது. ராணுவத்தில் உள்ள யூதர்களை நீக்க வேண்டும் என்று ஹிட்லரின் அதிரடிப்படைத் தலைவர் எர்னஸ்ட் ரோம் வற்புறுத்திவந்தார். அவருடைய நிர்ப்பந்தத்தை முதலில் ஏற்க மறுத்த ராணுவத் தலைவர்கள், பிறகு ஒப்புக் கொண்டனர். இதன் காரணமாக திறமை வாய்ந்த யூத ராணுவ தலைவர்கள் உள்பட பலர் வெளியேற்றப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, அதிரடிப்படையினரை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினார் ரோம். ராணுவத்தலைவர்கள் இதை ஏற்க மறுத்தனர். ஹிட்லரும் அவர்கள் முடிவுதான் சரி என்று ரோமிடம் கூறினார். இது ரோமுக்கு ஆத்திரமூட்டியது. ராணுவத்தின் உதவியோடு ஹிட்லரை கவிழ்த்துவிட்டு, ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டான். அவனுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. அத்தோடு, முன்னாள் பிரதமர் வான் ஸ்லெய்ச்சர், வான் பாப்பென், இவர்களுடன் வான் போஸ் என்பவனும் இணைந்து சதித்திட்டத்தை தீட்டினர். பேச்சுரிமை மறுக்கப்பட்டிருப்பதாக வெளிப்படையாக குறைகூறத் தொடங்கியிருந்தனர். அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். ஹிட்லர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், ஹிட்லரின் நண்பரான ருடால்ப் ஹெஸ் முன்கூட்டியே யூகித்தான். ஹிட்லரின் அந்தரங்கச் செயலாளராக செயல்பட்டு வந்த அவன், இப்போது துணைத்தலைவராக இருந்தான். கட்சிக்குள் ஹிட்லருக்கு நெருக்கமானவர்கள் சேர்ந்து நடத்தும் சதி குறித்து அவனுக்கு தெரியவந்தது. ஹிட்லரிடம் இதுகுறித்து விவாதித்தான். கோயரிங், கோயபல்ஸ் ஆகியோரிடம், சதியில் ஈடுபடுகிறவர்களின் பட்டியலைத் தயாரிக்கும்படி உத்தரவிட்டான். மே மாதம் அந்தப் பட்டியல் கைக்கு கிடைத்தது. அதைக் கொண்டுபோய் ஹிட்லரிடம் கொடுத்தான் ஹெஸ். பட்டியலை வாங்கிப்பார்த்த ஹிட்லர், மறுவார்த்தை பேசாமல், ஈவா பிரவுன் இருந்த அறைக்குள் போனார். துரோகிகள் என்றோ, முதுகில் குத்தி விட்டார்கள் என்றோ கத்துவதுதான் ஹிட்லரின் வழக்கம். ஆனால், இந்த முறை, ஈவா பிரவுனின் மார்பில் முகம் புதைத்து குலுங்கிக் குலுங்கி அழுதார்.

அடுத்தநாள், அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார் ஹிட்லர். அதை ருடால்ப் ஹெஸ் ஏற்கவில்லை. கோயரிங்கும், கோயபல்ஸும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர். ஜூன் 30 ஆம் தேதிவரை இந்த இழுபறி நீடித்தது. சதிகாரர்கள் மீது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும், தான் ஆதரிப்பதாக ஹிண்டன்பர்க் தெரிவித்துவிட்டார். மிகக் கொடூரமான தண்டனை. விசாரணையே இல்லாமல் கொல்லப்பட்டனர். முன்னாள் பிரதமர் ஸ்லெய்ச்சர், தனது வலதுகரமாக அதிரடிப்படையை தலைமையேற்று நடத்திய ரோம், வான் போஸ் உள்பட 77 பேர் கொல்லப்பட்டதாக ஹிட்லர் கூறினார். இந்தப் படுபாதகச் செயலுக்கு தானே பொறுப்பேற்பதாக உருக்கமாக தெரிவித்தார்.

சதித்திட்டத்தில் பங்குபெற்ற வான் பாப்பென் மட்டுமே கருணை அடிப்படையில் உயிர்தப்பி ஓடினார். இந்தச் சதி தொடர்பாக கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 287 முதல் 401 வரை இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், 1957ல் யுத்தக்குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் ஆயிரம்பேருக்கு மேல் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. (இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்குப் பிறகு, இந்தப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு, ஸ்பாண்டவ் சிறையில் அடைக்கப்பட்ட ஒரே குற்றவாளி ருடால்ப் ஹெஸ் மட்டுமே. அவரே இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது)

ரத்தத்தின் ருசியை ஒருமுறை சுவைத்து விட்டால், பின்னர், ரத்தவெறி பிடித்து அலைவார்கள் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், ஹிட்லர் அப்படிப்பட்ட இயல்பு இல்லாதவர். அவருடன் நெருங்கிப்பழகிய பெண்கள், அவரை மிகவும் நல்லவர் என்றே கூறுகிறார்கள். மியூனிக் புரட்சியின் போதுகூட வன்முறைக்கு வன்முறை என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இல்லாதவராகத்தான் இருந்தார். காவல்துறையினருடன் மோதக்கூடாது. யாரையும் துன்புறுத்தக் கூடாது என்றுதான் ஊர்வலமாக புறப்படுவதற்கு முன் கட்சிக் காரர்களிடம் கூறினார். அதையும் மீறி கலவரம் வெடித்தபோது, காயமடைந்து கிடந்த சிறுவனைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிற மனிதாபிமானம் அவரிடம் இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் இல்லாத நேரத்தில், நண்பர்களுடன் சிரித்துப் பேசுவார். இசையை ரசிப்பார். கலையை ஆராதிப்பார். இயற்கையை வியப்பார்.

விலங்குகளிடம் மிகவும் பிரியமாக இருப்பார். இரண்டு ஷெப்பர்டு நாய்களை வளர்த்தார். ஒருமுறை நீச்சல் குளத்தில் விழுந்த வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றி, அது இறக்கை விரித்துப் பறக்கும் வரை காத்திருந்தார். மற்றவர் துன்புறுவதைப் பார்ப்பதும் அவருக்கு பிடிக்காது. ஈவா பிரவுன் ஒருமுறை பல்வலியால் துடித்தபோது ஹிட்லர் பதறிப்போனார். பிறகெப்படி இத்தனை கொடுமைகளும் அரங்கேறுகின்றன? இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் ஹிட்லர் நேரடிப் பொறுப்பாளி அல்ல. அவருடன் இருந்தவர்கள் மிக மோசமான “சாடிஸ்ட்”டுகள். யூதர்களைத் தாக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசுவார் ஹிட்லர். ஆனால், அவரைச் சுற்றியிருந்தவர்கள், ஜெர்மனியின் ஆயிரம் நகரங்களில் யூதர்களை தாக்கினர்.

தனது அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் பாதிரியாரை ஹிட்லர் கண்டித்துப் பேசினார். ஆனால், அவரைச் சுற்றியிருந்தவர்கள் அந்தப் பாதிரியாரை நையப்புடைத்து சிறையில் தூக்கிப் போட்டனர். தனது கட்சிக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஹிட்லருக்கு தெரிந்திருந்தது. ஆனால், கண் தெரியாதவர் போலவும், காது கேட்காதவர் போலவும் நடித்துக் கொண்டிருந்தார். ஹிட்லருக்கு மிகவும் நெருக்கமானவர்களின் கோணல் புத்தியைப் பற்றித் தெரிந்துகொண்டால், அவர் மீதான வெறுப்பு கொஞ்சம் குறையக்கூடும். ஆனால், தன்னைச் சுற்றிலும் இப்படிப்பட்டவர்களை வைத்திருந்த நபரா இவர்? என்று, வெறுப்பு அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு.

ஹிம்லர் மிகக் கொடூரமான பாலியல் வன்புணர்ச்சிக்காரர். ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் மட்டமான ரசனைக்காரர். மனைவியிடம் கூட முரட்டுத்தனமான முறையற்ற உறவு கொள்ளும் பழக்கமுடையவர். 1930 தேர்தல் பிரச்சாரத்திலேயே இவருக்கும், ஆண் மருத்துவர் ஒருவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மூக்குக்கண்ணாடி அணிந்த வாத்தியார்போல இருப்பார். புழுப் பூச்சிக்குக் கூட தொந்தரவு தாரதவர் போன்று தோற்றமளிப்பார். இளைஞர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட பல்துர் வான் ச்ராச் படு கேவலமான செக்ஸ் வெறியன். இயக்கத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களை, கூச்சநாச்சமில்லாமல் கற்பழிப்பான். தன்னைப்பற்றி புகார் செய்ய அவர்களுக்கு துணிச்சல் இல்லை என்று கிண்டலாக கூறுவான். நகக்கண்ணில் ஊசிகளை ஏற்றி விதவிதமாக கொடுமைப் படுத்துவான்.

ஜூலியஸ் ஸ்ட்ரெய்ச்சர் என்பவன், தொடக்கத்தில் சோசலிஸ்ட் கட்சியில் இருந்தவன். யூதர்களைக் கடித்துக் குதறுவது என்றால், இவனுக்கு ரொம்பவும் இஷ்டம். யூதப் பெண்களை இழிவுபடுத்தும் ஏராளமான செக்ஸ் கதைகளை எழுதியிருக்கிறான். யூதப்பெண்களின் உடையை களைந்துவிட்டு நிர்வாணமாக பார்த்து ரசிப்பதில் ஆனந்தப்படுவான். நாஜிகள் ஆட்சிக்கு வந்தபின்னர், கான்ஸன்ட்ரேஷன் முகாம்களில், யூதப்பெண்களை கற்பழிக்கும்படி தனது உறுப்பினர்களுக்கு உத்தரவிடுவான். அவர்கள் கற்பழிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பான். யூதர்களை பழிதீர்ப்பதில் மிகத் தீவிரமாக இருந்தவர்களில் மற்றொருவன் ஹெய்ட்ரிச். இவன் சிறுவயதில் பல்வேறு குற்றங்களுக்காக பலமுறை சிறை சென்றவன். அதிக எண்ணிக்கையில் யூதர்களைக் கொன்றவன் என்பதற்காக ஹிம்லரின் பாராட்டுக்களை பெற்றவன். அல்லது அவனுடைய பாராட்டுக்களைப் பெறுவதற்காகவே யூதர்களைக் கொன்று குவித்தவன்.

இவர்களுக்கெல்லாம் மேலாக கோயபல்ஸ் மிகப்பெரிய சாடிஸ்ட்டாக இருந்தான். ஜெர்மன் மொழியில் யூதர்கள் எழுதிய புத்தகங்கள், அவர்களைப் பெருமைப்படுத்தும் புத்தகங்கள், அவர்களை அடையாளப்படுத்தும் புத்தகங்கள் எத்தனை இருக்கிறது என்பதை பட்டியலிட்டான். அவற்றை அழித்துவிட ஹிட்லரின் ஒப்புதல் பெற்றான். 1933 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி, அந்தப் புத்தகங்கள் அனைத்தும் பெர்லின் நூலகங்களில் இருந்து சேகரிக்கப்பட்டன. பல்கலைக்கழகத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட மிகப்பெரிய குவியலாக குவிக்கப்பட்டு, சொக்கப்பனை போல கொளுத்திக் கொண்டாடினர்.

அந்தத் திருவிழா ஜெர்மனி முழுவதும் தொடர வேண்டும் என்று கோயபல்ஸ் உத்தரவிட்டான். 1933 அக்டோபர் 4 ஆம் தேதி ஜெர்மனியிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் எத்தகைய செய்திகளை வெளியிட வேண்டும். எந்தச் செய்தியை எப்படி வெளியிட வேண்டும் என்பதை கோயபல்ஸ்தான் தீர்மானிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்த பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வானொலி ஒலிபரப்பு, செய்தித்திரைப்படம் தயாரிப்பு போன்றவையும், விரைவிலேயே கோயபல்சின் கட்டுப்பாட்டில் வந்தன.

இந்நிலையில்தான், 1934 ஆகஸ்ட் 2 ஆம் தேதி, குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்க் மரணமடைந்தார்.  குடியரசுத்தலைவர் தேர்தல் எதற்கு நடத்த வேண்டும்? அது ஒரு தொல்லை பிடித்த வேலை. அதுதான் நான் இருக்கிறேனே. எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்வேன். அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆக, ஹிட்லர் முழுமையான சர்வாதிகாரி ஆகிவிட்டார்.