Skip to main content

"குழந்தைகளை விட்டுவிடுங்கள்; அவர்களுக்கு பதிலாக என்னை சுடுங்கள்" - இராணுவத்தின் முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரி!

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

MYAMAR NUN

 

மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

போராட்டங்களை ஒடுக்க, 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்துள்ள மியான்மர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகளை மட்டுமின்றி துப்பாக்கி சூடும் நடத்தி வருகிறது.

 

இராணுவத்தின் தாக்குதலினால், மக்கள் தொடர்ந்து பலியாகி வரும் நிலையில், குழந்தைகளைக் காக்க கன்னியாஸ்திரி ஒருவர், தன் உயிரை தியாகம் செய்ய முன்வந்துள்ளார். மியான்மரின் மைட்கினா நகரில் போராடிக்கொண்டிருந்தவர்களை இராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அந்தப் போராட்டத்தில் குழந்தைகளும் இருந்துள்ளனர். இராணுவம் தாக்குதல் நடத்த தயாரானதைப் பார்த்த கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நியூட் டாங், இராணுவத்தின் முன் மண்டியிட்டு, “குழந்தைகளைச் சுடுவதற்கு, சித்திரைவதை செய்வதற்குப் பதிலாக என்னை சுட்டுக்கொல்லுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான படங்களும், விடீயோக்களும் உலகம் முழுவதும் தற்போது பரவி வருகிறது.

 

இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அந்தக் கன்னியாஸ்திரி, "நான் மண்டியிட்டு குழந்தைகளை சுடாதீர்கள். சித்திரவதை செய்யாதீர்கள். அதற்குப் பதிலாக என்னை சுடுங்கள்" என்று கேட்டேன் என கூறியுள்ளார். அப்போது இரண்டு இராணுவ வீரர்கள் கன்னியாஸ்திரி முன் மண்டியிட்டு "போராட்டத்தை நிறுத்த நங்கள் இதை செய்ய வேண்டும். இங்கிருந்து நகர்ந்துவிடுங்கள்" எனக் கூறியுள்ளனர்.

 

இதன்பிறகு சற்று நேரத்தில், கன்னியாஸ்திரி தாக்குதல் நடத்த வேண்டாம் என மன்றாடிக்கொண்டிருக்கும்போதே ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. "குழந்தைகள் பயந்து முன்னால் ஓடினார்கள். குழந்தைகளைக் காப்பாற்றுமாறும், அவர்களுக்கு உதவுமாறும் கடவுளை வேண்டிக்கொண்டிக்கொள்வதை தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை" என அந்த தருணங்களை விவரிக்கிறார் கன்னியாஸ்திரி.

 

கன்னியாஸ்திரி முன்பே ஒருவர், தலையில் சுடப்பட்டு விழுந்துள்ளார். அப்போது "உலகம் நொறுங்குவதைப் போல் இருந்தது. நான் அவர்களிடம் மன்றாடும்போதே இது நடந்தது துயரமளிக்கிறது" என கன்னியாஸ்திரி தனது மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார். குழந்தைகளுக்குப் பதிலாக என்னை சுடுங்கள் என இரஞ்சிய கன்னியாஸ்திரியின் செயல், பலரது நெஞ்சை தொட்டாலும், சர்வாதிகாரத்திற்கு நெஞ்சம் என்ற ஒன்று இல்லை என்பதே வேதனை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்! 

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
worth Rs 280 crore seized in Chennai

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த 10 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். இந்த சூழலில் அவர் போதைப்பொருள் கடத்த இருப்பதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தப் புகாரின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் விடுதியில் உதயகுமார் தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பெரம்பூரில் உள்ள அக்பர் அலி என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 280 கோடி மதிப்புள்ள 56 கிலோ போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருளை மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக இலங்கைக்கு கடந்த முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

Next Story

மணிப்பூருக்குள் சட்ட விரோதமாகப் புகுந்த 718 பேர்; அரசின் அடுத்த அதிர்ச்சி

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

718 Myanmar nationals have entered Manipur illegally

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மைச் சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதையடுத்து, மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்டபோது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், கலவரமாக மாறியது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்தக் கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

 

இந்த நிலையில், கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்ததையடுத்து, கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது மணிப்பூர் அரசு. இதனிடையே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட, 5வது நாளான இன்றும்  இரு அவைகளும் முடங்கியது. 

 

இந்த நிலையில் மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் ஊடுருவியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் 718 பேர் அகதிகளாக ஊடுருவியுள்ளனர் என்றும், மியான்மரில் இருந்து ஊடுருவியவர்களை அசாம் ரைபிள் படையினர் தடுக்கத் தவறியுள்ளனர் என்றும் கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து மணிப்பூர் உள்துறை அமைச்சகம் அசாம் ரைபிள் படையிடம்  விளக்கம் கேட்டுள்ளது. அதில் முறையான பயண ஆவணங்கள் மற்றும் விசா இல்லாமல் 718 பேர் எப்படி மணிப்பூருக்குள் வந்தனர் என்பதையும் அசாம் ரைபிள் படையிடம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.