Skip to main content

டயானாவை போல மேகனும் குறிவைக்கப்படுகிறார் - இளவரசர் ஹாரி அச்சம்...

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

இளவரசி டயானாவை போல மேகன் மார்கலும் அந்நாட்டு ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார் என இங்கிலாந்து இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.

 

harry about princess megan markle and media

 

 

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கலை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் உலக அளவில் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியானது. தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக இங்கிலாந்து அரச குடும்பம் குறித்த செய்திகளை வெளியிடுவதில் அந்நாட்டு பத்திரிகைகளுக்கும் மிகப்பெரிய போட்டியே நிலவி வருகிறது. அரசு குடும்பத்தின் உணவு முதல் உடை வரை எதுவாக இருந்தாலும் அது குறித்த செய்திகள் அந்நாட்டு பத்திரிகையில் உடனே இடம்பிடித்துவிடும். அந்த வகையில், இது குறித்த தனது அச்சத்தை இங்கிலாந்து இளவரசர் ஹாரி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே தந்தையை பிரிந்து வளர்ந்த மேகன், அவர் தந்தைக்கு எழுதிய கடித்தை தி மெயில் நாளிதழ் அண்மையில் வெளியிட்டது. தனிப்பட்ட முறையில் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் சில வரிகளை நீக்கி அதன் பொருளை திரித்து வெளியிட்டதாக அந்த நாளிதழ் மீது மேகன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தனது கருத்துக்களை கூறியுள்ள ஹாரி, மேகனுக்கு நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வரலாறு மீண்டும் திரும்புவது போன்ற ஒரு அச்சத்தை தனக்கு தருவதாக பயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உலக அளவில் பெரிதும் கொண்டாடப்பட்ட டயானா, அந்நாட்டு ஊடகத்தினர் புகைப்படம் எடுக்க துரத்திய போதே கார் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அந்நாட்டு ஊடக செய்திகளால் டயானாவின் தனிப்பட்ட வாழ்க்கை அதிக அளவில் பாதிக்கப்பட்டது என்ற கருத்தும் பரவலாக நிலவி வருகிறது. இதனை குறிப்பிடுவது போன்று, தன்னுடைய தாய் டயானாவை தொடர்ந்து தற்போது மேகனும் ஊடகத்திற்கு இரையாவது போல், தான் உணர்வதாகவும், இதனால் ஏற்கனவே ஒரு உயிரை தான் இழந்துள்ளதாகவும், இளவரசர் ஹாரி வேதனை தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்  

Next Story

IND vs ENG : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
IND vs ENG : 192 runs target for Indian team

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்கை இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 35 வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.