"என்னுடைய பெயரை தவறான வழியில் பயன்படுத்துகின்றனர்"... க்ரெட்டா குற்றச்சாட்டு....

உலகநாடுகள் பங்குபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் 74வது பொதுக்கூட்டத்தில் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை கடுமையாக விமர்சித்து இணைய உலகில் பிரபலமானவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியான க்ரெட்டா தன்பெர்க்.

greta thunberg files for trademark to her name

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி ஸ்வீடன் நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தி உலக மக்களின் கவனத்தை இவர் பெற்றார். அதன்பின்னர் 'பிரைடேஸ் பார் பியூச்சர்' என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் உலகம் முழவதும் சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார். இதனையடுத்து கடந்த ஆண்டு ஐ.நா வில் இவரின் உரையும் உலக அளவில் பெரும் ஆதரவை பெற்றது.

இந்நிலையில் தனது பெயரையும், பிரைடேஸ் பார் பியூச்சர் அமைப்பின் பெயரையும் சிலர் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். "பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் ஆகியோரை தொடர்பு கொள்வதற்காக சிலர் என்னையும், என்னுடைய பெயரையும் தவறான வழியில் பயன்படுத்த முயல்கின்றனர். சிலர் என் பெயரையும் என் இயக்கத்தின் பெயரையும் பயன்படுத்திப் பணம் ஈட்டி வருகின்றனர்" என கூறியுள்ள க்ரெட்டா, இதன் காரணமாக தனது பெயருக்கும், தனது அமைப்பின் பெயருக்கும் காப்புரிமை பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

greta thunberg
இதையும் படியுங்கள்
Subscribe