தடுப்பூசி போட்டுக்கலையா?.. அப்போ மாதம் மாதம் அபராதம் கட்டுங்க - அதிரடி காட்டும் கிரீஸ் நாடு!

greece

உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கரோனாபரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட கரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

அந்தவகையில்கிரீஸ் நாடு, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மாதாந்திர அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. கிரீஸ் நாட்டில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதிகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் கரோனாவால்இறப்பவர்களில்10-ல் ஒன்பது பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாகஇருந்து வருகின்றனர்.

இதனையடுத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, மாதம் மாதம் அபராதம் விதிக்க கிரீஸ் நாட்டு அரசாங்கம்முடிவு செய்துள்ளது.

VACCINE
இதையும் படியுங்கள்
Subscribe