Skip to main content

ஏலத்திற்கு வரும் 60 ஆண்டு பழமையான மக்கலான் விஸ்கி!

Published on 11/12/2019 | Edited on 12/12/2019

அமெரிக்காவின் கொலராடோ நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்டு குட்டிங். இவர் அடிக்கடி ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அங்கு நடக்கும் விஸ்கி பாட்டில் ஏலத்தில் பங்கேற்று விதவிதமான விஸ்கி பாட்டில்களை வாங்கிவந்து சேமித்து வைத்திருக்கிறார். ஏறத்தாழ 20 ஆண்டுகளில் சுமார் 3,900 விஸ்கி பாட்டில்களை சேமித்துள்ளார். 2014ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்ட நிலையில், இப்போது அந்த பாட்டில்கள் ஏலத்துக்கு வருகின்றன. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு சுற்றுகளாக ஏலம் நடைபெறப்போகிறது. இதில் உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளான மக்கலான், போமோர், ஸ்ட்ரோம்நெஸ் போன்றவற்றின் விஸ்கி பாட்டில்கள் இந்த ஏலத்தில் இடம்பெற உள்ளன.
 

yu



சுமார் 60 ஆண்டுகள் பழமையான மக்கலான் விஸ்கி ஏலத்திற்கு வரவிருக்கிறது. பாப் இசை கலைஞர் வலேரியோ அதாமியின் பெயர் பொறித்த 12 சிங்கிள் மால்ட் ஸ்காட் பாட்டில்களும் ஏலமிடப்படும். ஏற்கெனவே குட்டிங்கின் சேகரிப்பில் இருந்து ஏலமிடப்பட்ட ஸ்காட்லாந்து விஸ்கி பாட்டில் ஒன்று 1.1 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. 3,900 பாட்டில்களை ஏலமிட்டால் சுமார் 10 மில்லியன் டாலர் வரை ஈட்டலாம் என சொல்லப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கறி விருந்து... மது போதை...’ - தூக்கத்தில் வாலிபருக்கு நேர்ந்த சோகம்!

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

man passed away while sleeping in Madurai

 

மதுரை – வீரபாண்டிய நகர் – கருப்பாயூரணியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்  வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மூத்த மகன் சமயமுத்து (வயது 33), தன் மனைவியின் ஊரான திருச்சுழி வட்டம் – நெடுகனேந்தல்  கிராமத்துக்கு, மாமனார் கருப்பையா கட்டிய புது வீடு பால் காய்ச்சும்  நிகழ்ச்சிக்கு சென்றார். அன்றைய தினம் அங்கு தங்கிய சமயமுத்து, மறுநாள்  நடந்த கறி விருந்தில் கலந்துகொண்டு சாப்பிட்டிருக்கிறார். 

 

அன்றிரவு மது போதையில் படுத்து உறங்கியவருக்கு, அதிகாலை 1-50 மணிக்கெல்லாம் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பரிசோதித்த பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் சமயமுத்துவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், சமயமுத்து இறந்துவிட்டதை உறுதி செய்திருக்கிறார். சமயமுத்து இறப்பு குறித்து தந்தை தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில் திருச்சுழி காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. 

 

 

Next Story

“மது ஆறு அல்ல; புதுச்சேரி மது கடலாக மாறிவிடும்..” - முன்னாள் முதல்வர்  நாராயணசாமி

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Former Chief Minister  Narayanasamy condemn for Alcohol

 

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே  ஏராளமான மதுபானக் கடைகள் உள்ள நிலையில், புதுச்சேரி - தமிழக எல்லைப் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை சாமிப்பிள்ளை தோட்டத்தில் காமராஜர் மணி மண்டபம் அருகே புதிய மதுபானக் கடை அமைக்க புதுச்சேரி அரசும், கலால் துறையும் அனுமதி அளித்துள்ளது. பா.ஜ.க பிரமுகருக்கு சொந்தமான இக்கட்டடம் உள்ள பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். புதிய மதுபானக் கடை திறக்க கட்டுமான பணிகள் முடிந்து கடை திறப்பதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

 

புதிய மதுக்கடை வரும் பகுதியில் பிரசித்தி பெற்ற கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோயில், காமராஜர் மணிமண்டபம் மற்றும் நிறைய குடியிருப்புகள் உள்ளதால் புதிதாக மதுபானக்கடை கொண்டுவரக் கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக் குழு ஒன்றை அமைத்து, அந்த மதுபானக் கடையை திறக்க அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கடை திறப்பதற்கான வேலைகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாமிப்பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காமராஜர் மணிமண்டபம் அருகே ஒன்று கூடி புதிய மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக அதன் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்திற்கு மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த லெனின்.துரை, பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், பா.ம.க மாநில அமைப்பாளர் கணபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யு.சி பொதுச்செயலாளர் சேது.செல்வம், தமிழர் களம் மாநில அமைப்பாளர் அழகர் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் மதுபானக்கடை கொண்டுவரக்கூடாது என்று வலியுறுத்தியும், மதுபானக்கடைக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மக்கள் முழக்கங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினர். அப்போது ஒரு கட்டத்தில் அப்பகுதி பெண்கள் மதுக்கடை திறக்க உள்ள பகுதியை நோக்கி சென்றபோது போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் 350-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டீக்கடையில் கூட மதுபானங்கள் விற்க அனுமதி அளிக்கப் போவதாக தெரிகிறது. ஏற்கனவே புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன. புதிதாக 6 மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க உள்ளனர். ஏற்கனவே ஓடும் மதுபானம் ஆறு., இனி மது கடலாக மாறிவிடும். பெண்களின் போராட்டத்தின் மூலம்தான் மதுக் கடைகளை அகற்ற முடியும். அதற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்" என்று கூறினார்.