Skip to main content

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இலங்கை வடக்கு மாகாண ஆளுநர்

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

Governor of the Northern Province of Sri Lanka thanks Chief Minister MK Stalin

 

இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டு மக்களும், இலங்கை தமிழர்களும் உணவுபொருட்கள் வாங்கவே கடும் சிரமத்தை அடைந்துவருகிறார்கள். இந்நிலையில், இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உதவ ஒன்றிய அரசு சட்டப்பூர்வ அனுமதியை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். 

 

அந்தக் கடிதத்திற்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு விரும்பினால் இலங்கையில் பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளை ஒருங்கிணைக்க தலைமைச் செயலாளரை அனுப்பி வைக்கலாம் என்றும் ஜெய்சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.

 

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட டாக்டர்.எஸ்.ஜெய்சங்கருக்கு தனிப்பட்ட நன்றி. இந்த மனிதாபிமான நடவடிக்கை அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும். மேலும் இரு நாடுகளுக்கு இடையே அரவணைப்பு மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்” என்று தெரிவித்திருந்தார். 

 

Governor of the Northern Province of Sri Lanka thanks Chief Minister MK Stalin
ஜீவன் தொண்டமான்

 

இந்நிலையில், இலங்கை - நுவரெலியா, நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இலங்கை அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி கரங்களை நீட்டிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழர்களுக்கு மட்டுமின்றி அந்த உதவியை மொத்த இலங்கை மக்களுக்கும் செய்திருக்கிறார். இந்த நன்றியை என்றும் நாங்கள் மறக்கமாட்டோம். அவர் அறிவித்திருக்கும் ரூ. 80 கோடி மதிப்பிட்டில், சுமார் 40,000 டன் அரிசி, ரூ. 78 கோடியில் மருந்துகள், ரூ.15 கோடியில் பால் பவுடர் உள்ளிட்டவற்றை முன்மொழிந்திருக்கிறார். என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்” என்றிருக்கிறார். 

 

Governor of the Northern Province of Sri Lanka thanks Chief Minister MK Stalin
ஜீவன் தியாகராஜா

 

அதேபோல், இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்திருப்பதாவது; “கடந்த 29ம் தேதி நான் இந்தியா வந்திருந்தேன். அன்றைய தினம் தம்ழிநாடு சட்டமன்றத்தில் பல்வேறு உதவிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். அதிலும், அடிப்படை தேவைகளான உணவு, பால் பவுடர் மற்றும் மருந்துகளை வழங்க முன்வந்திருக்கிறார். ஆளுநராக தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது வாழ்த்தையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

இலங்கை - யாழ்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரான ம.ஆ. சுமந்திரன் வெளிட்டுள்ள வீடியோவில், “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மக்களை மீட்கவும், அவர்களுக்கு உதவி செய்வதற்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக எங்களின் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம். 

 

Governor of the Northern Province of Sri Lanka thanks Chief Minister MK Stalin
ம.ஆ. சுமந்திரன்

 

அதிலும், நீங்கள் முன்னமே முன்வந்து இப்படியான உதவி செய்வோம் என்று அறிவித்தபோது; தயவுசெய்து தமிழ் மக்களுக்கு மட்டும் செய்யாமல் அனைத்து இலங்கை மக்களுக்கும் செய்வது இந்த நேரத்தில், பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் பணிவுடன் உங்களுக்கு சொன்னபோது, அதனை சரியான முறையில் புரிந்துகொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு, மிகமிகப் பெரிய ஒரு உதவியை நீங்கள் ஒன்றிய அரசு மூலமாக இலங்கைக்கு அனுப்பவதாக தீர்மானித்து நிறைவேற்றிய சட்டமன்ற தீர்மானத்திற்காக எங்களின் உடன் பிறவா சகோதரரான உங்களுக்கு இதய பூர்வமான நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.