Skip to main content

இரண்டாயிரம் 'போலி மொபைல் செயலிக்களை' நீக்கி கூகுள் நிறுவனம் அதிரடி!

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகள் எந்த அளவுக்கு நமக்கு வேகமாக கிடைக்கிறதோ, அதை விட அதிகமாக போலி செய்திகள் பரவி வருகிறது. உலகில் நாளுக்கு நாள் ஒரு பக்கம் தொழில் நுட்பங்கள்  வளர்ந்தாலும், அதன் தொடர்ச்சியாக தீய மற்றும் தேவையற்ற தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருவதால், வருங்கால இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்வி குறியாகவுள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் "கூகுள் பிளே ஸ்டோரில்" இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலி "மொபைல் செயலிகளை" நீக்கியதாக அறிவித்துள்ளது.

 

 

GOOGLE COMPANY IS TWO THOUSANDS APPS DELETED IN GOOGLE PLAY STORES

 

 

இந்த செயலிகள் அனைத்தையும் நீக்க மக்கள் கூகுள் பிளே ஸ்டோரில் கருத்து தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையிலே நீக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் ஆக்கப்பூர்வ செயலிகளை மக்கள் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட மொபைல் செயலிகளில் பெரும்பாலும் உண்மையான செயலிகள் போல் இருந்ததாகவும், தேவையற்ற விளையாட்டு செயலிகள் (GAME APPS), வீடியோ செயலிகள் (VIDEO APPS) உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகள் நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊழியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு தந்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Google CEO Sundar Pichai gave a shocking announcement to the employees!

உலகின் முன்னனி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் தான் கூகுள் நிறுவனம். கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார். 

இதற்கிடையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது. அப்போது, இது பேசுபொருளாக அமைந்தது. இந்த பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து,  கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான சில அடுக்குகளை நீக்க வேண்டியது காலத்தின் அவசியம். அதனால், இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும். இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். ஆனால், இந்த பணி நீக்கம் கடந்தாண்டின் அளவிற்கு இருக்காது. அதே போல், இது அனைத்து துறையிலும் இருக்காது” என்று தெரிவித்தார். 

கூகுள் நிறுவனங்களில் கடந்தாண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்; மீண்டும் தொடங்கிய தாக்குதல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

The ceasefire ended; The attack resumed

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.