ADVERTISEMENT

வானத்தில் கடவுள் கண் ??!! சீனாவில் வினோத நிகழ்வு!!

01:30 PM Jul 06, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீனாவில் வானத்தில் மேகக்கூட்டங்கள் ஒன்று சேர்ந்து கண் போன்று காட்சியளித்த சம்பவம் வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் அது கடவுளின் கண் என்றும் அங்குள்ள மக்களால் நம்பப்பட்டு வருகிறது. அங்கு நடக்கும் இரண்டாவது வினோத சம்பவம் இது என்றே கூறலாம்.

சீனாவில் வடக்கு இன்னர் மங்கோலியாவில் மேகக்கூட்டங்கள் ஒன்று சேர்ந்து கண் போன்றும் அந்த கண் போன்ற மேகக்கூட்டத்தின் நடுவில் இருந்த நிலா கண்ணின் கருவிழி போன்றும் தோன்றியது.

இந்த காட்சி அங்கிருந்த பெண் ஒருவரால் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி அந்த கண் கண் வடிவம் கடவுளின் கண் என்றும் உள்ளூர் வாசிகள் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அங்கு அண்மையில் கடந்த நவம்பர் அன்று மூன்று சூரியன்கள் ஒரே நேரத்தில் உதித்ததாக கூறப்பட்டது.

இதுபோன்ற தொடர்ச்சியாக விசித்திர நிகழ்வுகள் அங்கு தொடர்ந்து வந்தாலும் அதுபற்றி அங்குள்ள எந்த இயற்கை ஆய்வாளர்களும் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT