பல விதவிதமான காரணங்களுடன் உலகம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான விவாகரத்துகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அமீரகத்தில் உள்ள அஜ்மான் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்தனது கணவர் பப்ஜி கேம் விளையாட விடவில்லை என கூறி விவாகரத்து கேட்டுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அஜ்மானை சேர்ந்த 20 வயதான பெண் ஒருவர் அஜ்மான்காவல்துறையிடம், தனது கணவர் தன்னை பப்ஜி விளையாட அனுமதிக்கவில்லை. எனவே என்னால் அவருடன் வாழ முடியாது, விவாகரத்து வேண்டும் என கூறி புகார் அளித்துள்ளார்.
மேலும் அந்த புகாரில், "நான் குறைவான நேரம் மட்டுமே போனில் கேம் விளையாடுகிறேன், அதுவும் என் உறவினர்களுடன் மட்டும் தான் விளையாடுகிறேன். ஆனால் அதனையும் விளையாடக்கூடாது என எனது கணவர் கட்டுப்பாடு விதிக்கிறார். எனவே அவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள்" என அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அஜ்மான் காவல்துறையினர், "பல இளைஞர்கள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி விடுகின்றனர். அதுபோல அந்த பெண்ணும் ஆகிவிடக்கூடாது என்ற எண்ணத்திலேயே அவரது கணவர் அவ்வாறு கூறியுள்ளார்" என கூறினார்.
சமீப காலங்களில் உலகம் முழுவதும் இளைஞர்கள் பப்ஜி விளையாட்டில் நீண்ட நேரம் மூழ்கி அதற்கு அடிமையாகி வரும் நிலையில், இந்த விளையாட்டு இந்தியாவின் பல நகரங்கள் உட்பட உலகில் பல நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.