Skip to main content

ராட்சத கிரைண்டருக்குள் தவறி விழுந்த இளம் பெண் கொடூர மரணம்...

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

இறைச்சி பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்த பெண் இறைச்சி அரைக்கும் கிரைண்டருக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

girl accidentally fell into a giant meat grinder

 

 

பென்சில்வேனியா நாட்டின் லைகமிங் கவுன்ட்டி பகுதியில் உள்ள இறைச்சி அரைத்து பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஜில் கிரிநிஞ்சர் என்ற இளம் பெண் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இறைச்சி அரைக்கும் ராட்சத கிரைண்டரை மேற்பார்வையிடும் வேலையை செய்து வந்துள்ளார் அந்த இளம் பெண்.

அப்போது தடுமாறி தவறுதலாக இறைச்சி அரைக்கும் அந்த கிரைண்டருக்குயில் அந்த பெண் விழுந்துள்ளார். உள்ளே விழுந்த அவர் அலறுவதை கேட்ட அங்கிருந்த தொழிலாளர்கள் அங்கு விரைந்துள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு சென்று கிரைண்டரை ஆஃப் செய்வதற்குள் அவரும் இறைச்சியுடன் சேர்ந்து கிரைண்டருக்குள் நசுக்கப்பட்டு இறந்துள்ளார்.  

அவசர உதவி குழுவினர் அழைக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் அவர் இறந்துவிட்டார். பின்னர் கிரைண்டர் உள்ளே இறங்கி அவரது உடலை தனியாக பிரித்து எடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண் இப்படி கொடூரமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிராய்லருக்கு சாயம் பூசி நாட்டுக்கோழி என விற்பனை ; 22 கிலோ இறைச்சி அழிப்பு

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

Selling broiler chicken dyed as country chicken; 22 kg of meat recover

 

அண்மையில் நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு உணவு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் சிக்கும் தரமற்ற உணவுப் பொருட்கள் குறிப்பாக தரமற்ற அசைவ உணவுகளை பறிமுதல் செய்வதோடு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் ஆய்வாளர் தங்கவேல் ஆகிய தலைமையிலான அதிகாரிகள் குழு திடீரென திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள சாலையோர இறைச்சி மற்றும் மீன் கடைகளில் அதிரடி சோதனை செய்தனர். இந்த ஆய்வில் பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்து போன பிராய்லர் கோழிகளை வாங்கிவந்து  செயற்கையாக நிறங்களைப் பூசி நாட்டுகோழி என விற்பனை செய்தது தெரியவந்தது. மோசடியில் ஈடுபட்டு விற்பனை செய்தது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு பெண்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கோழி இறைச்சிகள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. அவர்களை கடுமையாக எச்சரித்து நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள் எவ்வாறு தரமான முறையில் இறைச்சிகளை வாங்க வேண்டும் என அங்கிருந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  

 

 

 

Next Story

“இறைச்சி சாப்பிடுவதால்தான் பேரிடர்கள் ஏற்படுகின்றன...” - ஐஐடி இயக்குநர்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Eating meat causes cloudbursts say iit mandi director laxmidhar behera

 

‘இறைச்சிகள் அதிகம் சாப்பிடுவதால்தான், இமாச்சலப்பிரதேசத்தில் இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன’ என்று ஐஐடி இயக்குநர் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

 

இமாசலப்பிரதேச மாநிலம் மண்டி ஐஐடியில் இயக்குநர் லட்சுமிதர் பெஹரா நிகழ்வு ஒன்றில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், இறைச்சி சாப்பிடுவதால் தான் இமாச்சலப் பிரதேசத்தில் அதிக இயற்கை பேரிடர் ஏற்படுவதாகக் கூறியது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அந்த நிகழ்வில் பேசிய லட்சுமிதர் பெஹரா, ‘நீங்கள் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?’ என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் அமைதியாக இருக்க, உடனே, ‘அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள்’ என்று கூறிய லட்சுமிதர் பெஹரா, ‘இனி அசைவம் சாப்பிட மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று மாணவர்களிடம் கூறியுள்ளார். 

 

தொடர்ந்து பேசிய அவர், “இமாச்சலப்பிரதேசத்தில் மக்கள் இறைச்சி சாப்பிடுவதால்தான் இங்கு மேக வெடிப்பு, நிலச் சரிவு, பெரு வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன. மாமிசத்திற்காக விலங்குகளை அழித்தல் என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதைப் போன்றது. இதுபோன்ற பேரிடர்களை மீண்டும்  நீங்கள்  பார்ப்பீர்கள். இந்த பாவத்தின் விளைவுதான் இந்த இயற்கைப் பேரழிவு” என்று பேசினார்.