இறைச்சி பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்த பெண் இறைச்சி அரைக்கும் கிரைண்டருக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பென்சில்வேனியா நாட்டின் லைகமிங் கவுன்ட்டி பகுதியில் உள்ள இறைச்சி அரைத்து பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஜில் கிரிநிஞ்சர் என்ற இளம் பெண் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இறைச்சி அரைக்கும் ராட்சத கிரைண்டரை மேற்பார்வையிடும் வேலையை செய்து வந்துள்ளார் அந்த இளம் பெண்.
அப்போது தடுமாறி தவறுதலாக இறைச்சி அரைக்கும் அந்த கிரைண்டருக்குயில் அந்த பெண் விழுந்துள்ளார். உள்ளே விழுந்த அவர் அலறுவதை கேட்ட அங்கிருந்த தொழிலாளர்கள் அங்கு விரைந்துள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு சென்று கிரைண்டரை ஆஃப் செய்வதற்குள் அவரும் இறைச்சியுடன் சேர்ந்து கிரைண்டருக்குள் நசுக்கப்பட்டு இறந்துள்ளார்.
அவசர உதவி குழுவினர் அழைக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் அவர் இறந்துவிட்டார். பின்னர் கிரைண்டர் உள்ளே இறங்கி அவரது உடலை தனியாக பிரித்து எடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண் இப்படி கொடூரமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.