Skip to main content

நூற்றாண்டு பழமை வாய்ந்த ஐ.பி.எம் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆகும் இந்தியர்...

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

தொழில்நுட்ப துறையில் நூற்றாண்டுகாலமாக முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் ஒருவர் பொறுப்பேற்க உள்ளார்.

 

Ginni Rometty stepped down as ibm ceo and indian origin arvind krishna to replace her

 

 

108 ஆண்டுகளாக தொழில்நுட்ப உலகில் அசைக்கமுடியாத நிறுவனமாக திகழ்ந்து வருவது ஐ.பி.எம் நிறுவனம். இதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த கின்னி ரோமேட்டி பதவி விலகும் நிலையில், அவரது இடத்திற்கு இந்தியாவை சேர்ந்த 57 வயதான அரவிந்த் கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கான்பூர் ஐ.ஐ.டி பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம்பெற்ற அவர், 1990 ஆம் ஆண்டு டாக்டரேட் பட்டம் பெற்றார்.

அதே ஆண்டே ஐ.பி.எம் நிறுவனத்தில் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா சுமார் 30 ஆண்டுகாலம் அந்நிறுவனத்தின் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி, கடந்த ஆண்டு முதல் ஐபிஎம் கிளவுட் மற்றும் அறிவாற்றல் மென்பொருளுக்கான  மூத்த துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இதனையடுத்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த கின்னி ரோமேட்டி பதவி விலகும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் அரவிந்த் கிருஷ்ணா தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வினோத காரணம் கூறி 1 லட்சம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய ஐ.பி.எம் நிறுவனம்...

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

கடந்த 100 ஆண்டுகால தொழில்நுட்ப உலகில் மாபெரும் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது ஐ.பி.எம் நிறுவனம். உலகம் முழுவதும் பல நாடுகளில் தொழில் நடத்தி வரும் இந்நிறுவனம் வயது மூப்பின் காரணமாக தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருவதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

 

ibm sacked one lakh employees to look cool and trendy

 

 

ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இணையாக புதுமையாகவும், நாகரீகமாகவும் மாற்றும் பொருட்டு 40 வயதை கடந்த 1 லட்சம் பணியாளர்களை கடந்த 5 ஆண்டுகளில் ஐபிஎம் நிறுவனம் பணியை விட்டு நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐபிஎம் நிறுவனம் இந்த குற்றசாட்டை முற்றிலும் மறுத்த நிலையில், அமெரிக்க ஊடகம் ஒன்று இது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தரவுகளை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் தனது மொத்த பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை நீக்கியுள்ள இந்நிறுவனம், அதை ஈடுசெய்ய அதிரடி ஆள்சேர்ப்புப் பணியும் செய்துவருவதாக முன்னாள் பணியாளர்கள் ஐபிஎம் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

புதுமையாகவும், நாகரீகமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 40 வயது ஆனவர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது பலரையும் ஆச்சர்யமாக பார்க்க வைத்துள்ளது. 

 

 

Next Story

இந்திய ஐடி ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் 'IBM' நிறுவனம்!

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

உலகில் மிகப்பெரிய ஐ.டி நிறுவனமான ஐ.பி.எம் 300 இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. உலகெங்கும் வளர்ந்த மென்பொருள் நிறுவனங்களில் ஐ.பி.எம் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் கீழ் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகின்றனர். ஐ.பி.எம் நிறுவனம் ஆனது வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு துறையில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாகவே சுமார் 300 இந்திய மென்பொறியாளர்களை நீக்கியாகவும், அதே போல் செயற்கை நுண்ணறிவு திறன் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் திறன் உள்ள இளைஞர்களை உடனடியாக பணியில் அமர்த்த தயாராக உள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இந்த தொழில் நுட்ப பயிற்சியை  ஐ.பி.எம் நிறுவனமே அளித்தால் அவர்கள் இங்கே பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி நிறுவனத்திடம் எழுப்பப் பட்டதாகவும், ஆனால் அந்த பயிற்சிக்கு அதிக செல்வாகும் என்பதால் பயிற்சி அளிக்க முடியவில்லை என ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

IBM BANGALORE

 

 

இந்த நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கையால் இந்திய ஐடி மென்பொருள் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், ஐடி துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய மென்பொருள் நிறுவனங்கள் கடந்த காலங்களில் சத்யம் நிறுவனத்தால் அதிக இழப்பை சந்தித்த நிலையில் , அதை விட அதிக பாதிப்பை உலக முழுவதும் ஏற்படுத்தும் , எனவே இத்தகைய தொழில் நுட்பத்தை பொறியியல் படிப்பில் சேர்த்து அவர்களுக்கு கல்லூரிலிலேயே பயிற்சி அளித்தால் மட்டுமே வேலை இழப்பு நீங்கி வேலை வாய்ப்பு பெருகும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்தியாவில் அடுத்தடுத்த நாட்களில் மென்பொருள் நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.