பூங்காவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மகனுக்குப் பின்னால் பேய் இருப்பதைக் கண்ட தாயார் அச்சத்தில் உறைந்துள்ளார்.

Advertisment

Ghost

இங்கிலாந்தில் நார்த்தம்பர்லேண்ட் பகுதியில் உள்ள பூங்காவிற்கு, லாரா வாட்சன் எனும் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். நீண்ட தூரம் நடந்துவிட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்தபோது, குழந்தைகள் மரத்தில் ஏறி விளையாடத் தொடங்கியுள்ளனர். அப்போது லாராவின் மகன் பைரின் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, லாரா தனது கேமிராவில் படம்பிடித்துள்ளார்.

பூங்காவைச் சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்பிய லாரா, அங்கு எடுத்த புகைப்படங்களை வீட்டில் வைத்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மரத்தடியில் பைரின் நிற்கும் புகைப்படத்தில், பைரினுக்கு பின்புறம் கோரமான முகம், கறுத்த தலைமுடியுடன் ஒரு சிறுவன் பைரினின் தோள்ப்பட்டையில் கையை வைத்திருப்பது போல் இருந்துள்ளது.

Advertisment

அதுவரை பேய் விவகாரங்களில் நம்பிக்கை இல்லாத லாரா, இதனைக் கண்டதில் இருந்து உறக்கம் கெட்டுப்போய் கிடக்கிறாராம். பலர் இதை போட்டோஷாப் வேலை என்று விமர்சித்தாலும், லாராவோ தனக்கு எந்தத் தொழில்நுட்பமும் தெரியாது என்று மறுத்துள்ளார். லாராவுக்கு இருக்கும் அச்சமெல்லாம், புகைப்படத்தில் இருக்கும் பேய் அப்படியே வீட்டிற்கு வந்துவிட்டதோ என்பதுதான்.