Skip to main content

வீட்டிலேயே பணம் அச்சடித்த பெண்... ஆடி கார் ஆசையால் போலீஸிடம் சிக்கினார்...

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

ஆடி கார் வாங்க வேண்டும் என்பதால் பணத்தை வீட்டிலேயே பிரிண்ட் போட்டு ஷோரூமிற்கு எடுத்து சென்ற 20 வயது ஜெர்மனி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

german woman arrested for using fake currency to buy audi car

 

 

ஜெர்மனியை சிறந்த 20 வயதான பெண் ஒருவர் நீண்ட காலமாக ஆடி கார் ஒன்றை வாங்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரிடம் அதற்கான பணம் இல்லாத நிலையில் வீட்டிலேயே கள்ள நோட்டு அடிப்பதென முடிவெடுத்துள்ளார். சாதாரண இன்க்ஜெட் பிரிண்டர் மூலம் 15,000 யூரோ பணத்தை பிரிண்ட் எடுத்த அவர், நேராக ஆடி கார் ஷோரூமிற்கு சென்றுள்ளார்.

அங்கு ஆடி A3 2013 ரக காரை தேர்வு செய்த அவர், அதனை வாங்கிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் அதற்கான பணத்தை செலுத்த கவுண்டருக்கு சென்றுள்ளார். அப்போது அவர் பணத்தை கொடுத்த போது அதனை மிக எளிதாக போலி நோட்டுகள் என அங்கிருந்த நபர் கண்டறிந்துள்ளார். ஆனாலும் இந்த பெண் எதோ பிராங்க் ஷோ நடத்துகிறார் என எண்ணி அவரிடம் பேசியுள்ளார்.

பின்னர் அவரிடம் தொடர்ந்து பேசிய போது, அவர் உண்மையிலேயே அந்த போலி நோட்டுகளை வைத்து கார் வாங்க வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் காவல்துறைக்கு போன் செய்துள்ளனர். பின்னர் அங்கு  வந்த காவலர்கள் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Shorter working hours scheme came into force in Germany from tomorrow

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

குழந்தையை மீட்க மோடி தலையிட வேண்டும்; இந்திய வம்சாவளியினர் கோரிக்கை

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

Modi should intervene to rescue the child; Claim of Indian origin

 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாவேஷ் ஷா. இவர் ஜெர்மனியில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு தாரா ஷா என்ற பெண்ணுடன் திருமணமாகி, 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 

 

இந்த நிலையில் இவர்களது மகள் 7 மாதக் குழந்தையாக இருக்கும் போது ரத்தப் போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது, அந்த குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அதனுடன், அந்த நாட்டின் சட்டப்படி அவர் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவுக்கும் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அரசின் குழந்தை நலக் காப்பகத்துக்குக்  குழந்தை அனுப்பப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து, அந்த குழந்தையின் பெற்றோர் தங்களுடைய குழந்தையை ஒப்படைக்குமாறு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்கள். ஆனால், அந்த மனுவை ஜெர்மனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 20 மாதங்களுக்கு மேலாகக் குழந்தையை மீட்கப் பெற்றோர் சட்டப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், குழந்தையை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கக் கோரி ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட்டில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.