Skip to main content

ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல்: 15 பேர் பலி

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

மாலியில் இரு பிரான்ஸ் ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 அதில் பயணித்த வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 2012ஆம் ஆண்டு மாலி நாட்டின் வடக்குப் பகுதியை அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதக் குழுக்கள் கைப்பற்றின. அவர்களை மாலி ராணுவம் பிரான்ஸ் ராணுவத்தின் உதவியுடன் விரட்டியது. அதிலிருந்து அந்நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத்த் தாக்குதல்கள் நிகழ்ந்துவருகின்றன.


அந்த பயங்கரவாதக் குழுக்களை அழித்து அமைதியை நிலைநாட்ட, மாலி மற்றும் பிரான்ஸ் ராணுவப் படைகள் இணைந்து செயல்படுகின்றன. மாலி நாட்டின் வடக்கு எல்லைப் பகுதியில் இரண்டு பிரான்ஸ் ராணுவ ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளாயின.
 

சார்ந்த செய்திகள்

Next Story

விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து-பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

Planes crash head-on - shocking video footage


விமானங்கள் ஒன்றுக்கொன்று நேராக மோதி விபத்து ஏற்பட்ட காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் விமான சாகச கண்காட்சியில் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் விமானப்படை சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு விமானங்கள் கலந்து கொண்டு சாகசங்களை நிகழ்த்தி காட்டின. இதில் கலந்துகொண்ட பெரிய ரக போயிங் பி17 குண்டுகள் வீசும் விமானமும், ஒரு சிறிய ரக விமானமும் வானில் சாகசம் செய்யும் வகையில் பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக சிறிய விமானம் பெரிய விமானத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டு இரு விமானங்களும் தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதிலிருந்த ஆறு பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

 

Next Story

நேபாள நாட்டு விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

நேபாள நாட்டு அரசின் பொதுத்துறை நிறுவனம் தாரா ஏர்லைன்ஸ். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், இன்று (29/05/2022) காலை 09.55 மணிக்கு பொக்காராவில் இருந்து புறப்பட்டு, ஜோம்சோமுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள் மற்றும் மூன்று ஜப்பானியர்கள், விமான பணியாளர்கள் என மொத்தம் 22 பேர் பயணம் செய்தனர்.

 

விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியது. இதையடுத்து, மாயமான விமானத்தைத் தேடும் பணியை நேபாள நாட்டு அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் நேபாள நாட்டு அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாயமான விமானம் கடைசியாக, தவுலகிரி மலைப்பகுதியில் காணப்பட்டதாகவும், அங்கு தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விமானம் விழுந்த இடம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேபாளத்தின் மஸ்டாங் மாவட்டத்தின் கோவாங் கிராமத்தில் விமானம் விழுந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் விமானத்தின் நிலை குறித்து இன்னும் தகவல்  தெரியவில்லை என திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.