ADVERTISEMENT
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் 100 டன் கடல்சார் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கி வருவது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
மீன்கள், சுறாக்கள், டால்பின்கள், ஆமைகள், நண்டுகள் போன்ற கடல்சார் உயிரினங்கள் ப்ளோரிடா மாகாணத்தில் சுவாச பிரச்சனைகளால் உயிரிழந்து வருகின்றன. கடலில் ரெட் டைட் என்று சொல்லப்படும் அலை உருவாகும் போது, கடலில் இருக்கும் குறிப்பிட்ட பாசிகள் நச்சுத்தன்மையை வெளியிடுகிறது. இதன்காரணமாக கடல்சார் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. இதனால் மாகாணத்தைச் சேர்ந்த ஏழு கவுண்டிகளுக்கு எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை சரி செய்ய 1.5 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படுவதாக ப்ளோரிடா ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Show comments