Skip to main content

சாலையில் தரையிறங்கிய விமானம்... அதிர்ச்சியில் உறைந்த பயணி்கள்!

Published on 03/08/2019 | Edited on 03/08/2019

அமெரிக்காவில் நெரிசல் மிகுந்த போக்குவரத்து சாலையில், சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சியாட்டிலின் தேசிய நெடுஞ்சாலையில், வாஷிங்டன் மகாண காவல் அதிகாரி கிளிண்ட் தாம்ஸன் என்பவர், சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் ரோந்து சென்றபோது சிறிய ரக விமானம் ஒன்று குறைந்த உயரத்தில் பறந்து சென்றுக்கொண்டிருந்ததைக் கண்டார். அலுவலக நேரம் என்பதால் அந்த சாலையில் நெரிசல் மிகுந்திருந்தது. சிறிய ரக விமானம் சாலையில் தரையிறங்கப்போவதை உணர்ந்த அந்த காவல் அதிகாரி, உடனடியாக, அவசர விளக்கை போட்டு, டிராஃபிக்கை நிறுத்தி, சிறிய ரக விமானம் தரையிறங்க உதவி புரிந்தார்.
 

aaa



ஒருவர் மட்டுமே பயணிக்ககூடிய கே.ஆர் 2 ரக அந்த விமானம், வாகனங்கள் சென்று கொண்டிருந்த நெரிசல் மிகுந்த சாலையில் தரையிறங்கியது. இதனால் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். விமானத்தை ஓட்டிவந்த வந்த டேவிட் பெக்காம் என்ற விமானியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், விமானத்தின் எரிபொருள் அமைப்பில் ஏற்பட்ட கோளாறால், அதனை அவசர அவசரமாக விமானி தரையிறக்கியது தெரிய வந்துள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.