Skip to main content

ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

Five children in a single delivery

 

 

குழந்தை பேறு என்பது இப்போதெல்லாம் அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. உணவு முறைகளாலும், உடல் பழக்க வழக்கங்களினாலும் கருவுரும் தாய்மார்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக திருமணமான இளம் வயது பெண்கள் முதல் ஐம்பது வயதை தாண்டியவர்களும் மருத்துவமனை சிகிச்சைக்காக தவம் இருப்பதை எல்லா ஊர்களிலும் காணமுடியும் ஒரே ஒரு குழந்தை பிறந்தால் போதும் என பல ஆண்டு ஏங்கும் தம்பதிகளும் இருக்கிறார்கள்.

 

ஆனால் இயற்கையின் அதிசயமாக ஒரே பிரசவத்தில் இரு குழந்தைகள், மூன்று குழந்தைகள், ஏன் ஆச்சரியப்படும் விதத்தில் நான்கு குழந்தைகளும் பிறந்து பெற்றோர்களுக்கு பூரண மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று ஒரு கர்பிணி தாய்க்கு ஐந்து குழந்தைகள் பிறந்து அதிசியத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இது இங்கல்ல அருகே உள்ள இலங்கையில், கொழும்பு சொய்சா மகளிர் மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமையன்று ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளதாக அந்த மருத்துவமனை கண்கானிப்பாளர் புஷ்பா கம்லத்கே கூறியிருக்கிறார், இவ்வாறு பிறந்த அந்த ஐந்து  குழந்தைகளுமே பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

கம்பஹா - பெபிலியாவல பகுதியைச் சேர்ந்த 29 வயதான கர்பிணி தாய் தனது முதல் பிரசவத்திலேயே இந்த ஐந்து பெண்குழந்தைகளும் பெற்றெடுத்துள்ளார். ஐந்து குழந்தைகளுமே நல்ல உடல் ஆரோக்கித்துடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதில் பிறந்த ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தையின் எடை மட்டும் சற்று குறைவாக உள்ளதுடன் அக்குழந்தையின் எடை ஒரு கிலோவாகவும் உள்ளது என்றும் மருத்துவமனை பிரதி கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார். மற்ற குழந்தைகளின் எடை 1 கிலா 4 கிராமிற்கும், 1 கிலோ 8 கிராமிற்கும் இடைப்பட்டதாக இருக்கிறது.

 

இலங்கையில் சில ஆண்டுக் கணக்கில் இது நான்காவது முறையாக இவ்வாறு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஐந்து குழந்தைகளையும் ஆரோக்கியத்துடன் வளர்த்துவது என்பது பெற்றோர்களால் மிகவும் சிரமம் என்பதால் அரசு சிறப்பு உதவிகள் செய்ய வேண்டும் எனவும் சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார்.