Skip to main content

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பெயர் பட்டியல்... 100 பேரின் விவரங்கள் வெளியீடு...

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை இந்தியா பெற்றுள்ளது.

 

first list from swiss government about black money account holders

 

 

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்திற்கு எதிராக உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் இந்திய அரசும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை பெற சுவிஸ் அரசுடன் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தது. அதன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் தற்போது இந்த பட்டியல் வழக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

AEOI கட்டமைப்பின் கீழ் இந்தியா, சுவிஸ் அதிகாரிகளிடமிருந்து விவரங்களைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். இதன்படி தற்போது செயலில் உள்ள வங்கிக்கணக்குகள், 2018 ஆம் ஆண்டில் மூடப்பட்ட கணக்குகள் குறித்த விவரங்கள் இந்தியாவுக்கு கிடைக்கப்பெற்ற உள்ளது. தற்போது இந்தியா பெற்றுள்ள இந்த பட்டியலில் 100 பேரின் கணக்கு விவரங்களை சுவிஸ் வருமான வரித்துறை அளித்துள்ளது. இதில் பெரும்பாலும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், ரசாயனங்கள், ஜவுளி, ரியல் எஸ்டேட், வைரம், நகை மற்றும் எக்கு பொருட்கள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களே அதிகம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கை கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இளம்பெண் கொடூரக் கொலை!

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

Foreign woman passed away in Delhi

 

டெல்லியில் சித்திரவதை செய்யப்பட்டு வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

டெல்லி திலக் நகர் பகுதியில் உடலில் சித்திரவதை செய்த அடையாளங்களுடன் வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற டெல்லி போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, கண்கள் பிதுங்கிய நிலையிலும், உடலில் தீயால் சுட்ட காயங்களும், இருந்துள்ளன. மேலும் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதற்கான தடையங்களும் இருந்துள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆராய்ந்து பார்த்துள்ளனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக  குர்பிரீத் என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்த பெண் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், குர்பிரீத் சுவிட்சர்லாந்தில் வைத்துச் சந்தித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  

 

இந்த நிலையில்தான் சம்பவத்தன்று, அவருடைய கை, கால்களைக் கட்டிப் போட்டு கொலை செய்து பழைய கார் ஒன்றில் வைத்திருக்கிறார். நாளடைவில் உடலிலிருந்து துர்நாற்றம் வெளிவரவே, சாலையோரம் உடலை வீசிவிட்டுத் தப்பித்துச் சென்றிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணிற்கும், குர்பீரித்திற்கும் என்ன தொடர்பு என்றும், ஏன் அவரை கொடூரமாகக் கொன்றார் என்பது குறித்தும் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாரா என்பதும் தெரியவரும் என போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட்ட சுவிஸ்! 

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

The Swiss published the bank account details of Indians!

 

இந்தியர்கள் பலர் தங்கள் கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு நிலவிவருகிறது. கடந்த சில வருடங்களாக தங்கள் நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து இந்தியாவிற்கு வழங்கிவருகிறது.

 

அதன்படி இந்த ஆண்டும் சுவிஸ் வங்கி, தனது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட தகவலை வெளியிட்டுள்ளது. 

 

இதன் மூலம், சுவிஸ் வங்கியில் இருக்கும், தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் சார்ந்த நூற்றுக்கணக்கான பொருளாதார கணக்குகள் அடங்கிய தகவல் இந்திய அரசுக்கு கிடைத்துள்ளது. இந்த தகவல் பரிமாற்றத்தில் இரகசியத்தன்மை காரணமாக மொத்த பணத்தின் மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.