Skip to main content

1 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு ஆப், இப்பொது ஆப்பிளின் கையில்...!

Published on 26/09/2018 | Edited on 26/09/2018

முதலில் ஆண்ட்ராய்டு மூலமாக அறிமுகமாகிய ஷாசம் (Shazam) ஆப், நம் மனதுக்கு பிடித்தமான பாடல், படம் என ஏதாவது ஒன்றின் பெயர் நமக்கு தெரியவில்லை என்றால், அதன் ஐந்து நொடி இசையை மட்டும் அதில் ஓடவிட்டால் போதும் அது எந்தப் படம், யார் அந்தப் பாடலை பாடியது என்று அது சம்பந்தமான அனைத்து விவரங்களையும் நமக்கு கொடுத்துவிடும். இந்த ஆப் ஆண்ட்ராயிட் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டாலும், அப்போதே இது ஆப்பிள் ஐ.ஓ.எஸ். ஃபோனங்களிலும் இந்த ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து உபயோகிக்கும் வசதி இருந்தது. ஆனால் இன்று இந்த ஆப்-ஐ முழுதாக ஆப்பிள் நிறுவனம் வாங்கிவிட்டது.

 

apple

 

2014-ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த ஆப் ஒரு மாதத்திற்கு 100 மில்லியன் பயன்பாட்டாளர்கள் இருந்துள்ளனர். அதன் பிறகு 2017-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் இந்த ஆப்-ஐ 400 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கப்போவதாக அறிவித்திருந்தது. பின் சில ஒப்புதல்களை எல்லாம் பெற வேண்டியிருந்ததால் கொஞ்சம் காலம் தாழ்த்தி 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி, தான் குறிப்பிட்ட தொகைக்கே (400 மில்லியன் அமெரிக்க டாலர்) வாங்கியுள்ளது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டில் 'இதுவரை உலக அளவில் 1 பில்லியன் முறை இந்த ஆப் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளில் மட்டும்  20 மில்லியன் முறை இந்த ஆப்-ஐ மக்கள் உபயோகப் படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தது.

 

இதுவரை இந்த ஆப்-ஐ உபயோகம் செய்யும்போது இடையில் விளம்பரங்கள் வந்து தொந்தரவு செய்யும். ஆனால், இனி அதுபோன்று விளம்பரங்கள் வராது என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சார்ஜர் இல்லாமல் ஐ போன்... ஆப்பிளுக்கு 19 கோடி அபராதம்

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

 iPhone without charger... Apple fined 19 crores!

 

சார்ஜர் இல்லாமல் ஐ போன் விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் அரசு.

 

சார்ஜர் உடன் மட்டுமே செல்போன் விற்க வேண்டும் என பிரேசில் அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் ஐ போனுக்கு கூடவே அதற்கான சார்ஜரை வழங்கினால் எண்ணிக்கை அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் தங்களால் செல்போனுடன் சார்ஜரை விற்க முடியாது என பிரபல நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து வந்தது. ஆனால் சாம்சங் தனது புதிய போனை சார்ஜர் உடன் விற்று வருகிறது. இந்நிலையில் சார்ஜர் இல்லாமல் ஐ போன்-12 மாடலை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் அரசு, சார்ஜர் இல்லாத அனைத்து ஐபோன் விற்பனைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.

 

 

Next Story

ஆப்பிளின் புதிய ஐஃபோன்- 13 சென்னையில் தயாராகிறது!

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

Apple's new iPhone 13 is ready in Chennai!

 

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோனான ஐஃபோன்- 13 உற்பத்தி, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கியுள்ளது. 

 

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒப்பந்த முறையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து தரும், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது ஆப்பிள் ஐஃபோன்- 13 உற்பத்தி செய்து தர தொடங்கியுள்ளது. இதையடுத்து, ஐஃபோன்களின் முன்னணி மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் சென்னை ஆலையில் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

சென்னையில் ஃபாக்ஸ்கான் உள்பட மூன்று ஒப்பந்த நிறுவனங்களில் ஆப்பிள்களின் ஐஃபோன்கள் உற்பத்திச் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஸ்ரீபெரும்புதூரில் ஐஃபோன் 13 உற்பத்தி நமது பயணத்தின் மற்றொரு மைல்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும், உலகத்துக்கும் மேக் இன் தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக்கில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.  

 

இந்திய செல்போன் சந்தையில் ஆப்பிள்களின் சந்தை பங்கும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.