Skip to main content

ஊரடங்கு காலத்தில் உச்சம் தொட்ட பெண் பிறப்புறுப்பு 'சிதைப்பு'... வீடுவீடாகக் கதவைத் தட்டும் அவலம்...

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

fgm count rises in somalia

 

ஊரடங்கு காலத்தில் பெண்களின் பிறப்புறுப்பு சிதைப்பு தொடர்பான சம்பவங்கள் ஆப்பிரிக்கா நாடுகளில் பெருமளவு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
 


பெண்களின் பிறப்புறுப்பு சிதைப்பு என்ற பெயரில் நடக்கும் இரக்கமற்ற செயல்கள் ஆப்பிரிக்கா நாடுகள் பலவற்றில் பாரம்பரிய சடங்காகவே செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த நடைமுறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பெண்களின் பிறப்புறுப்புகள் சடங்கு என்ற பெயரில் சிதைக்கப்படுவது பல நாடுகளில் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில், கரோனா காரணமாகப் போடப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களின் பிறப்புறுப்பு சிதைப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

பள்ளிச் செல்லும் பதின்பருவ பெண்களின் பிறப்புறுப்பின் வெளிப்புற பகுதியை நீக்குவது அல்லது முழுவதுமாகத் தைத்துவிடுவது போன்ற இந்தச் செயலால் அவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் வலியாலும், குழந்தை பிறப்பின் போது பிரச்சனையையும் சந்திக்க நேரிடுகிறது. உரிய மருத்துவ வசதிகள் கூட ஏதுமின்றி, மயக்க மருந்து பயன்பாடு கூட இன்றி, அந்தந்த பகுதிகளில் உள்ள முதியவர்கள், பெண் குழந்தைகளுக்கு இந்தச் சிதைப்பு செயல்முறையை மேற்கொள்கின்றனர். பெண்களுக்கு எதிரான மிகக்கொடிய வன்முறையாகப் பார்க்கப்படும் இந்தச் செயல் சோமாலியாவில் தற்போது பள்ளிகள் விடுமுறையில் உள்ளதால் பெருமளவு அதிகரித்துள்ளது.
 

 


பள்ளி விடுமுறை என்பதால் இதனைத் தற்போதே செய்துவிட்டால் பள்ளி செல்வதற்குள் குழந்தைகளின் உடல்நலம் தேறிவிடும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் இதனை அதிக அளவில் செய்ய ஆர்வம் காட்டி வருவதாகக் கூறுகின்றனர் அங்குள்ள சமூக ஆர்வலர்கள். இதன் காரணமாகப் பெண்ணுறுப்பு சிதைப்பைத் தொழிலாகச் செய்பவர்கள் வீடுவீடாகச் சென்று கதவைத் தட்டி, இந்தச் சடங்கைச் செய்ய வேண்டுமா எனப் பெற்றோர்களிடம் கேட்டு தற்போது செய்து வருகின்றனர். சோமாலியாவில் உள்ள சுமார் 98 சதவீதம் பெண்கள் இந்தப் பிறப்புறுப்பு சிதைப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் தன்னார்வலர் அமைப்பு ஒன்று, உலகளவில் 20 கோடி பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பான பயணம்’ - மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முன்னெடுப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Safe Travel for Women Metro Rail's New Initiative

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக அதன் பாதுகாப்பில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய ‘பிங்க் ஸ்குவாட்’ ஐ (Pink Squad) இன்று (15.02.2024) அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவில் பிங்க் ஸ்குவாட் பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டங்கள் துறை இயக்குநர் அர்ச்சுனன் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஜெயலக்ஷ்மி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அ.சித்திக் கூறுகையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் முழு சிசிடிவி கேமரா கண்காணிப்பு அமைப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிசிடிவி கேமரா கண்காணிப்பு வழங்குவதைத் தவிர, ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காகவும் பிங்க் ஸ்குவாட் அணியை நியமித்துள்ளது.

பிங்க் ஸ்குவாட் உறுப்பினர்கள் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு பயிற்சி பெற்றதுடன் வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர். முதல் கட்டமாக இந்த குழுவில் 23 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகள் அதிகமாக பயணிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களான சென்ட்ரல் மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுவாக அனைத்து பயணிகளுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்களுக்கும் பாதுகாப்பான பயணம் மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது” எனத் தெரிவித்தார். 
 

Next Story

ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி நடவடிக்கை; சட்டத்தை நிறைவேற்றிய மடகாஸ்கர் அரசு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Madagascar government passed the law Action to remove the male factor who misbehave

உலகெங்கிலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்த குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காகப் பல்வேறு நாடுகள் அதிரடி சட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றன. அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் என்ற நாடு, பெண் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மிகக் கடுமையான ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இதனிடையே, இந்த நாட்டில் வாழும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் 133 பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகாஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில், குற்றவாளிகளுக்கு ரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்யும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் அந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.