Skip to main content

மரணபயத்தை காட்டிய மார்க்.... பரிதவித்த இணையவாசிகள்... நடந்தது என்ன..?

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

காலை தூங்கி எழுந்தது முதல் இரவு தூங்க செல்வது வரை இளைஞர்களின் அமைதிக்கும், குனிந்த தலை நிமிரா பண்பிற்கும் காரணமாகி போனது ஸ்மார்ட் போனும், இணையதளமும்.

 

facebook instagram and whatsapp are back to normal

 

 

அதில் இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் நேரத்தை செலவிடுவது ஃபேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் தான். அப்படி இருக்க, ஒரே நேரத்தில் இவை அனைத்தும் தங்கள் செயல்பாட்டை நிறுத்தியது இளைய சமுதாயம் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது.

நேற்று ஃபேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று செயலிகளும் திடீரென வேலை செய்யாமல் நின்றது. இவை மூன்றிலும், புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பதிவிறக்கம் செய்ய முடியாமல் பயனாளர்கள் தவித்தனர். இவை மூன்றும் வேலைசெய்யாததை ட்விட்டர் மூலமாக ட்ரெண்ட் ஆக்கினர். இந்த ஹாஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் இன்று காலை இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,“இன்று சில பயனாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் எங்களுடைய சமூக வலைதளங்களில் படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனை தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும் சிரமத்துக்கு மன்னிக்கவும்’ என்று கூறப்பட்டுள்ளது.

பிரச்சனை சரியானாலும் நம் மீம் கிரியேட்டர்கள் இந்நிறுவனங்களின் தலைவரான மார்க் சக்கர்பர்க்கை கிண்டல் செய்து மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார்.