Skip to main content

50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் அம்பேல்... மீட்பது எப்படி...?

Published on 29/09/2018 | Edited on 29/09/2018

மிக பிரபலமான ஆப் என்றால் அது நிச்சயம் ஃபேஸ்புக்தான். ஆனால் இன்று உலக அளவில் ஃபேஸ்புக்கின் ஐம்பது மில்லியன் (ஐந்து கோடி) நபர்களின் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 4 கோடி நபர்களின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. 

 

ff

 

 

இந்த விஷயத்தை பொறியியல் நிபுணர் குழு கடந்த 25-ஆம் தேதி கண்டறிந்ததாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் (view as) எனும் வசதியைக்கொண்டே இந்த ஹாக் நிகழ்வு நடைபெற்றுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸுக்கர்பர்க் கூறுகையில் "தனிப்பட்ட நபரின் மெசேஜ்கள், பெயர், பாலினம் மற்றும் கணக்கு சம்பந்தப்பட்டவர்கள் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் எனும் தகவல்களை மட்டுமே ஹாக் செய்துள்ளார்கள், மற்றபடி கிரெடிட் கார்டு சம்மந்தப்பட்டத் தகவல்களை எல்லாம் ஹாக் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார். 

 

உங்கள் ஃபேஸ்புக் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை கண்டறிய சில வழிமுறைகள். எப்போதும் ஃபேஸ்புக் கணக்கை லாகின் செய்யும்போது நிரந்தரமாக இந்த கடவுச்சொல்லை வைத்துக்கொள்ளலாமா என்று ஃபேஸ்புக் செயலி கேட்க்கும். அதை ஒரு முறை ஓகே செய்துவிட்டால் மறுமுறை லாகின் செய்யும்போது, கடவுச்சொல்லை மீண்டும் போட வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் லாகின் செய்யும்போது மீண்டும் கடவுச்சொல்லை ஃபேஸ்புக் செயலி கேட்டால் உங்கள் ஃபேஸ்புக் கணக்கும் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். அப்படி இருந்தால் உங்களின் கடவுச்சொல்லை மட்டும் மீண்டும் ஒருமுறை மாற்றி அமைத்தால் போதுமானது என்று ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

இதனால் இன்ஸ்டாகிராமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அப்படி இருந்தால் உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கையும் மீண்டும் ஃபேஸ்புக் கணக்குடன் இன்னொருமுறை இணைக்கவேண்டும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார். 

Next Story

மெட்டாவர்ஸ்: இந்தியாவின் பங்கு குறித்து மகிழும் மார்க் ஜுக்கர்பெர்க்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021


 

mark

ஃபேஸ்புக் நிறுவனம், மெட்டாவர்ஸ் என்ற மெய்நிகர் உலகத்தை வடிவமைப்பதற்கான முதற்படியாக தனது பெயரை மெட்டா என அண்மையில் மாற்றிக்கொண்டது. அதனைத்தொடந்து மெட்டாவர்ஸை அமைக்கும் பணியில், மெட்டா நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

 

இந்தநிலையில் பியூல் ஃபார் இந்தியா நிகழ்ச்சியில் பேசிய மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்,  மெட்டாவர்ஸை உருவாக்குவதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கப் போகிறது.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; கிரியேட்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் எல்லாம் எங்கிருந்து வரப் போகிறார்கள், யார் உண்மையில் மெட்டாவர்ஸின் அடித்தளத்தை உருவாக்கப் போகிறார்கள் என்ற அடிப்படையில் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, இந்தியா அதில் பெரும் பங்கு வகிக்கப் போகிறது என்பது தெளிவாகிறது.

 

இந்த எதிர்காலத்தை (மெட்டாவர்ஸை)  உருவாக்குவதில் இந்தியா வகிக்கப்போகும் பங்கைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் பொறியாளர்கள், டெவலப்பர்கள் மற்றும் கிரியேட்டர்கள்  மற்றும் துடிப்பான ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு மார்க் தெரிவித்துள்ளார்.