Skip to main content

சிங்கப்பூர் போல் தமிழகத்தின் துறைமுகங்களை மாற்றும் முயற்சி; சிங்கப்பூரில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது குறித்து சிங்கப்பூர் நாட்டுக்கு சென்று துறைமுகங்கள் துறை அலுவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார் தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு.

 

சிங்கப்பூர் துறைமுக ஆணையம், தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் சிங்கப்பூர் வருகை தந்து இங்குள்ள துறைமுகங்கள் குறித்து பார்க்கவேண்டும் என அழைப்பு விடுத்தது. அதன் அழைப்பை ஏற்று செப்டம்பர் 27ஆம் தேதி பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் உயரதிகாரிகள் சிங்கப்பூர் சென்றனர்.

 

சிங்கப்பூர் நாட்டுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் பிரபாகர் அமைச்சரை வரவேற்றார். அதிகாரிகளுடன் சிங்கப்பூர் துறைமுகத்தின் சரக்கு பெட்டக முனையத்தை அமைச்சர் வேலு பார்வையிட்டார். அங்கிருந்த துறைமுக பிரதிநிதி அனைத்தும் சுற்றிக்காண்பித்து அதுகுறித்த தகவல்களை அமைச்சரிடம் தெரிவித்தார். அதன்படி, பன்னாட்டு துறைமுக சரக்கு பெட்டக முனையங்களில் சிங்கப்பூர் சரக்கு பெட்டக முனையம் முதன்மையான ஒன்றாகும். இது சிங்கப்பூர் சரக்கு பெட்டக பரிமாற்ற மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த சரக்கு பெட்டக முனையம் துறைமுக சேவைகள் மற்றும் சரக்கு தீர்வுகளை வழங்குகிறது.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

2023 ஆம் ஆண்டில் சரக்குகளை கையாள்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் இந்த துறைமுகம் மட்டும் 37 மில்லியன் சரக்கு பெட்டகங்களை வெற்றிகரமாக கையாண்டுள்ளது. பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு, கணினி சார்ந்த ஒருங்கிணைந்த துறைமுக முனைய இறங்குதல் வசதி மற்றும் துறைமுக வலைதளம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இந்த சாதனைக்கு காரணமாகும். சிங்கப்பூர் துறைமுகம் 55 கப்பல்கள் நிறுத்தும் தளம் மற்றும் சுமார் 50 மில்லியன் சரக்கு பெட்டங்களை கையாளும் திறன் கொண்டது என்று  அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

 

சிங்கப்பூர் துறைமுக அலுவலர்களிடம் அமைச்சர், தமிழ்நாட்டில் 1076 கிலோ மீட்டர் நீளமுடைய கடற்கரை உள்ளது. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சிறு துறைமுகங்கள் அமைந்துள்ளன. இந்த துறைமுகங்களையே அல்லது இதர சிறு துறைமுகங்களில் ஏதேனும் பொருத்தமான சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும், தமிழ்நாட்டின் கடற்கரையில் திறனை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிற வரவிருக்கும் திட்டங்களை பற்றியும் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும் சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

துறைமுகங்கள் மற்றும் கடல் சார்ந்த திட்டங்களுக்கு முதலீடுகளை எளிதாக்குவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு உறுதி அளித்தார். தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்த அமைச்சர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சிங்கப்பூர் துறைமுக பிரநிதிகள் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்கள்.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

அமைச்சர் சிங்கப்பூர் சென்றதும் திமுக அயலக அணியின் சிங்கப்பூர் பொறுப்பாளர்கள் அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அய்யங்குளத்தை திறந்து வைத்த அமைச்சர்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

nn

 

பக்தி நகரான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றிலும், கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான குளங்கள் இருந்தன. இந்த குளங்களில் அதிகமான குளங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி கட்டடங்களாகி விட்டன. இப்போது வெகு சில குளங்களே உள்ளன. அதனை பாதுகாக்க வேண்டும் என்று ஆன்மீகவாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

திருவண்ணாமலை நகரில் உள்ள சில குளங்களில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முடிவில் தெப்பம் விடும் நிகழ்ச்சி நடைபெறும். அதில் அய்யங்குளமும் ஒன்று. இந்த குளத்தின் கரைகள், 32 படிக்கட்டுகளில் 10க்கும் மேற்பட்ட படிகள் உடைந்து, சிதிலமடைந்து பல ஆண்டுகளாக இருந்து வந்தன. இக்குளத்தில் அதிகளவு சேறு சேர்ந்து புதைகுழியாக மாறின. சில ஆண்டுகளுக்கு முன்பு மஹாளய அமாவாசையின் போது தர்ப்பணம் கொடுக்க பூஜை செய்ய சிவாச்சாரியார்கள், ஐயர்கள் குளத்தில் இறங்கிய போது ஐந்துக்கும் மேற்பட்டோர் மூழ்கி இறந்தனர்.

 

அப்போது முதல் அக்குளத்தை செப்பனிட்டு சீர் செய்ய வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஐயர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலுவிடம் அய்யர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தூர்வாரும் பணியை செய்ய உத்தரவிட்டிருந்தார்.

 

அதன்படி 3 ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளமும், 360 அடி அகலமும் 32 அடி ஆழமும் கொண்ட குளத்தினை தூர்வாரி, சீரமைத்து, புனரமைக்கும் பணியினை அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் வேலு நடத்தும் தூய்மை அருணை இயக்கத்தின் சார்பில் செய்தார்.

 

nn

 

அந்த பணியினை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அப்போது அந்த குளம், நகரத்தில் வாரந்தோறும் தூய்மை பணியில் ஈடுபடும் ஐநூறுக்கும் அதிகமான தூய்மை அருணை இயக்கத்தினர் வருகை தந்திருந்தனர். குளத்தின் மையத்தில் 4 கால் மண்டபம் உள்ளது. சிதிலமடைந்த அந்த மண்டபத்தினை சீர் செய்து அதில் நந்திசிலை அமைத்து தரவேண்டும் என அய்யர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அங்கே நந்தி சிலை வைக்கப்படும் என அறிவித்தார் அமைச்சர் எ.வ.வேலு. அதன்படி நந்தி சிலையும் வைக்கப்பட்டது. தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் இறுதி நிகழ்வாக தெப்பம் விடும் உற்சவம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐயங்குளத்தில் கப்பல் உற்சவம் நடத்த வேண்டும் என்பதற்காக வேக வேகமாக பணிகள் முடிக்கப்பட்டு, நவம்பர் 25 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட ஐயங்குளத்தினை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“தூண்டுதலின் பேரில் சிலர் போராட்டம் நடத்துகிறார்கள்” - அமைச்சர் எ.வ.வேலு

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Minister EV Velu says  Some are protesting on the spur of the moment

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்திற்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதை எதிர்த்து மேல்மா என்ற இடத்தில் 125 நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்த உழவர்களில் பச்சையப்பன், தேவன், அருள், திருமால், சோழன், பாக்கியராஜ், மாசிலாமணி ஆகிய 7 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்திருக்கிறது. இதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (17-11-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “வட ஆற்காட்டில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்பட்ட போது அங்கு ஒரு தொழிற்சாலை கூட கிடையாது. தொழிற்சாலைகள் வந்தால் தான் படித்த இளைஞர்களுக்கு வேலைகள் உருவாக்க முடியும். அதனால் தான் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுகிறது. நிலம் கையகப்படுத்தாமல் தொழிற்சாலையை எங்கு அமைப்பது?

 

125 நாட்கள் சில பேர் ஊரில் இல்லாத ஆட்களை கொண்டு வந்து போராட்டத்தை நடத்துகின்றனர். கிருஷ்ணகிரியில் இருந்து இங்கு போராட்டம் நடத்துகின்றனர். அரசாங்கம் எந்தவித பணியையும் செய்யக்கூடாது என்று சிலர் திட்டமிட்டு போராட்டம் நடத்துகிறார்கள். விவசாயிகளை வஞ்சிப்பது அரசின் நோக்கம் கிடையாது. சிலர் தூண்டுதலின் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த 7 பேரை விடுவிக்க கோரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன்” என்று கூறினார். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்