Skip to main content

12 மற்றும் அதற்கும் மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி: அனுமதியளித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

european union

 

உலகெமெங்கும் அச்சுறுத்திவரும் கரோனவைக் கட்டுப்படுத்த, இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துப் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன. இந்தத் தடுப்பூசிகள் அனைத்தும் 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கே செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

 

சமீபத்தில் கனடா மற்றும் அமெரிக்கா நாடுகள் 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு பைசர் கரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதியளித்தது. இதனைத்தொடர்ந்து அந்த நாடுகளில் 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. 

 

இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கழகம், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்தியபோது, அதனால் அவர்களுக்கு கவலைப்படத்தக்க வகையில் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கழகம் கூறியுள்ளது.

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கழகத்தின் ஒப்புதலை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்குத் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இருப்பினும் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதைப் பற்றி மக்களே முடிவெடுப்பார்கள் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார ஆணையர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

 

Next Story

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை - ஐரோப்பிய ஒன்றியம், உலக நாடுகள் முடிவு!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

JOE BIDEN - BORIS JOHNSON

 

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் நேற்று ரஷ்ய ஆதரவுப்பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை அதிபர் புதின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார்.

 

மேலும் அப்பகுதிகளில் அமைதியைப் பேண ரஷ்யப் படைகளை அனுப்பவும் உத்தரவிட்டார். இது போர் பதற்றத்தை அதிகரித்திருப்பதுடன், உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன், டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளின் மேல் பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டார்.

 

இதனைத்தவிர ரஷ்யா மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றப்போவதாக அறிவித்துள்ளது. அதேபோல் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, புதின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளைச் சுதந்திர நாடாக அறிவித்தது ஏற்றுக்கொள்ளமுடியாதது எனவும், அது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் எனவும் கூறியுள்ளதோடு, ரஷ்ய மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்யா மீது உடனடியாக பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாகவும், அது ரஷ்யாவிற்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா இன்னும் மோசமாக நடந்துகொள்ளும் என அஞ்சுவதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.