Skip to main content

விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு இங்கிலாந்து பிரதமரின் விநோத பதில்..!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020
boris johnson

 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், இன்றுடன் 15வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

 

இதற்கிடையே, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசிய சீக்கிய எம்.பி. தன்மன்ஜீத் சிங், இந்தியாவில் பஞ்சாப் மற்றும் பிறபகுதிகளில் அமைதியாக போராடி வரும் விவசாயிகள் மீது, கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தண்ணீர் பீரங்கிகள் பயன்படுத்தப்படுகிறது. எனவே நமது பிரதமர், நமது மனதின் கவலைகளையும், இப்போது நடந்து வரும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையையும் இந்தியப்  பிரதமரிடம் தெரிவிப்பாரா?. அவர், ஒவ்வொருவருக்கும் அமைதியாக போராடுவதற்கான அடிப்படை உரிமை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளவரா? என கேள்வியெழுப்பினார்.

 


இதற்கு பதில் அளித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே நடப்பவைகள் குறித்து நமக்கு கவலைகள் இருக்கிறது. ஆனால், இது இரண்டு நாடுகளும் தீர்த்துக்கொள்ள வேண்டிய முதன்மையான பிரச்சனை என பதிலளித்தார். விவசாயிகளின் பிரச்சனை குறித்த கேள்விக்கு சம்மந்தமே இல்லாமல் இந்தியா, பாகிஸ்தான் குறித்து பேசிய போரிஸ் ஜான்சனின் பதில் கிண்டலுக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. 

 

 

இந்த சம்பந்தமில்லாத பதிலை சற்றும் எதிர்பாராத பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்ஜீத் சிங்  அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. லண்டன் உட்பட உலகம் முழுவதும், மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது பிரதமருக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாமல், நாட்டிற்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டார் என விமர்சித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகள் போராட்டம்; இணைய சேவை துண்டிப்பு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
nternet service outage Farmers protest at haryana

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கத்தார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது 

அதனால், அனைத்துப் பயிர்களுக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

விவசாய சங்கத்தினர், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று மேற்கொள்ள நாளை (11-02-24) முதல் ஹரியானாவில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் அந்த மாநிலத்தில் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நாளை (11-02-24) முதல் வரும் 13 ஆம் தேதி வரை ஹரியானாவில் ஏழு மாவட்டங்களுக்கு இணைய வழி சேவையை துண்டிக்க உத்தரவிட்டுள்ளார். அதில், அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சா ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் பேசுவதற்கான அழைப்புகளைத் தவிர இதர இணைய சேவைகளுக்கு வரும் 13 ஆம் தேதி காலை 6:00 மணி முதல் 13 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பொறுப்பேற்ற வேகத்தில் ராஜினாமா-பிரதமர் இன்றி தவிக்கும் இங்கிலாந்து

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

 Resignation at the pace of taking over - England struggling without a prime minister

 


இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் கடந்த மாதம் 6 தேதி பதவியேற்ற நிலையில் பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனாக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பிய நிலையில், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்றால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு  வலுப்படும் எனவும் கருதப்பட்டது.

 

இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான தேர்தல் கன்செர்வேட்டிவ் கட்சிக்குள் நடந்து முடிந்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமர் போட்டியிலிருந்த பிரிட்டன் லிஸ் ட்ரஸை மகாராணி எலிசபெத் முறைப்படி அறிவித்தார். அதன்பின் எலிசபெத் ராணியின் உயிரிழப்பு இங்கிலாந்தை சோகத்திற்குள்ளாக்கியது. அதனைத்தொடர்ந்து லிஸ் ட்ரஸ் தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சர்ச்சைக்குள்ளான நிலையில் அடுத்தது பல்வேறு அமைச்சர்கள் பதவி விலகினர். இந்நிலையில் பிரதமராக பதவியேற்ற  45 நாட்களில் தற்பொழுது பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய பிரதமர் அறிவிக்கப்படும் வரை காபந்து பிரதமராக லிஸ் ட்ரஸ் இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.