Skip to main content

ஃபேஸ்புக்கா... அப்படினா என்ன? - ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறும் பெருநிறுவனங்கள்!     

Published on 24/03/2018 | Edited on 24/03/2018

'ஸ்பேஸ்-எக்ஸ்' மற்றும் 'டெஸ்லா' நிறுவனங்களின் தலைவர் எலன் மஸ்க் தன் நிறுவனம் தொடர்பான ஃபேஸ்புக் பக்கங்களை நீக்கிவிட்டதாக, நேற்று (23-மார்ச்-18) அறிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் 50 மில்லியன்  ஃபேஸ்புக் பயனாளர்களின் விவரங்களை திருடிவிட்டதாகவும் அதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் துணை போனதாகவும் குற்றச்சாட்டு எழுந்துவந்தது. அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நம்பகத்தன்மையற்றது, பாதுகாப்பில்லாதது என பல குற்றச்சாட்டுகள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீதும் அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் மீதும் எழுந்துள்ளது.

 

elan


இந்நிலையில் ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலன் மஸ்க் தனது நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை நீக்கினார். நீக்குவதற்கு முன்னதாக ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான 'லைக்'குகள் மற்றும் பின்தொடர்பவர்கள் இருந்தனர். பேஸ்புக்கின் இந்தத் தகவல் திருட்டு புகார் பற்றி மற்றோரு சமூக ஊடகமான வாட்ஸ்-அப்பின் துணை நிறுவனர் ப்ரையன் ஆக்டமின், ''இது ஃபேஸ்புக்கை அகற்றுவதற்கான நேரம்'' (it's time to delete facebook) என்ற ட்வீட்டிற்கு ''வாட் இஸ் ஃபேஸ்புக்?" என்று ஏளனமாய் கருத்து கூறியுள்ளார் எலன் மஸ்க். 
 

elan


அண்மையில் 'பெல்கான் ஹெவி' எனும் பெரிய ராக்கெட்டையும் அதனுடன் 'ஜெரி ரெட்' எனும் டெஸ்லா காரையும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பிய தனியார் நிறுவனம்தான் இவருடைய 'ஸ்பேஸ்-எக்ஸ்' நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.        

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார். 

Next Story

பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Facebook, Instagram shocked the users

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் இன்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்படத் தொடங்கியது.