ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை... தாமதமாகும் முடிவு! 

america election

அமெரிக்கஅதிபர் தேர்தல் முக்கிய நிலையை எட்டியுள்ளது. தற்போது பென்சில்வேனியாவில் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆரம்பத்தில்அங்குடிரம்ப் முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது பைடன் 6 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பென்சில்வேனியா மாநிலத்தில் 20 தேர்வு மையங்கள் உள்ளது. ஜார்ஜியாவைதொடர்ந்து பென்சில்வேனியாவிலும்ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தகோரிய ட்ரம்ப் தரப்பின்கோரிக்கையை நீதிபதி நிராகரித்த நிலையில், மாநில நிர்வாகமேஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த முறை நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக ஒரு மாநிலத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடக்கவிருப்பதுகுறிப்பிடத்தகுந்தது. இதனால் அதிபர் தேர்தலின் முடிவு வெளியாவதில் காலதாமதம் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

America Donad trump Joe Biden
இதையும் படியுங்கள்
Subscribe