Skip to main content

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் அச்சம்

Published on 03/12/2019 | Edited on 03/12/2019


தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியின் வடக்குப்பகுதியில் உள்ள பெரு எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.46 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் பசுபிக் பெருங்கடல் கரையோரம் அமைந்துள்ள அரிகா நகரத்தை மையமாக கொண்டு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதால், அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த மக்கள் பீதி அடைந்தனர். பல இடங்களில் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 Powerful earthquake in Sri Lanka

 

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

 

இலங்கையின் தெற்குப் பகுதியில் கடலின் நடுப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கே 1,326 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.2 என சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகப் பதிவாகி உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Next Story

டெல்லியில் நிலநடுக்கம்

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

Earthquake in Delhi

 

டெல்லியில் திடீரென ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி என்.சி.ஆர், ஆக்ரா, சஜ்ஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நில அதிர்வு காணமாக அச்சமடைந்த மக்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 3.1 என ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.