earth quake croatia

உலகின் மூன்று நாடுகளில்இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குரேஷியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இத்தாலிவரை உணரப்பட்டுள்ளது. ரிக்டர்அளவுகோலில்6.4 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில், 7 பேர் பலியாகியிருக்கலாம் எனத்தகவல்கள் வெளியாகிவுள்ளது.

Advertisment

அதனைத் தொடர்ந்து, அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் ஜப்பான் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 9.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. சேதங்கள்குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இவ்விரண்டு நாடுகள் மட்டுமின்றிபாகிஸ்தான்தலைநகர் இஸ்லாமாபாத்தில், இன்று காலை 11.03 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர்அளவுகோலில்4.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்டபாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள்வெளியாகவில்லை.

Advertisment